Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Corinthians Chapters

1 Corinthians 15 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Corinthians Chapters

1 Corinthians 15 Verses

1 சகோதரர்களே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன்; நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
2 நான் உங்களுக்கு நற்செய்தியாக அறிவித்த வாக்கை நீங்கள் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருந்தால், அதனாலேயே மீட்படைவீர்கள்; இல்லையேல் நீங்கள் விசுவசித்தது வீண் என்று சொல்ல வேண்டியிருக்கும்.
3 ஏனெனில், நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானதாக உங்களுக்குக் கையளித்ததும் எதுவெனில், மறைநூலில் உள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.
4 அடக்கம் செய்யப்பட்டு, மறைநூலில் உள்ளபடியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
5 கோபுவுக்கும் பின்னர் பன்னிருவர்க்கும் தோன்றினார்.
6 பின்பு ஒரே சமயத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்களுக்குத் தோன்றினார் அவர்களுள் பலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர்; ஒரு சிலர் இறந்து போயினர்.
7 பின்னர் யாகப்பருக்கும், அடுத்து அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார்.,
8 எல்லாருக்கும் கடைசியாக, காலாந்தப்பிய பிறவி போன்ற எனக்கும் தோன்றினார்.
9 நானோ அப்போஸ்தலர்களுள் மிகச் சிறியன்; கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்திய நான் அப்போஸ்தலன் என்னும் பெயர்பெறத் தகுதியற்றவன்.
10 ஆயினும் நான் இப்பொழுது இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால் தான்; அவர் எனக்குத் தந்த அருளோ வீணாய்ப் போகவில்லை; அவர்கள் அனைவரையும் விட நான் மிகுதியாகவே உழைத்தேன் -- ஆனால் உழைத்தவன் நானல்லேன், என்னோடு இருக்கும் இறையருள்தான் உழைத்தது --
11 நானோ அவர்களோ யார் போதித்தாலும் நாங்கள் அறிவிப்பது இதுவே; நீங்கள் விசுவசித்ததும் இதுவே.
12 இனி, கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என அறிவிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்ப்பதில்லை என உங்களுள் சிலர் சொல்வெதப்படி?
13 இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை.
14 கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், எங்கள் தூதுரை பொருளற்றதே, உங்கள் விசுவாசமும் பொருளற்றதே.
15 நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சாட்சி சொல்பவர் ஆவோம். ஏனெனில், இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்பது உண்மையானால், கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தார் என்று நாங்கள் சொன்னபோது கடவுள் பெயரால் பொய்ச் சாட்சி சொன்னவர்கள் ஆனோம்.
16 ஏனெனில், இறந்தவர்கள் உயிர்த்தெழுவதில்லை யென்றால் கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை.
17 கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றாலோ உங்கள் விசுவாசம் வீணானதே. நீங்கள் இன்னும் பாவ நிலையிலேயே இருக்கிறீர்கள்.
18 அப்படியானால், கிறிஸ்துவுக்குள் துஞ்சியவர்களும் அழிந்துவிட்டனர்.
19 இம்மை வாழ்வுக்காக மட்டும் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தவர்களாயிருந்தால், எல்லாரையும் விட நாம் இரங்குவதற்குரியவர் ஆவோம்.
20 ஆனால் உள்ளபடி,. இறந்தோரிடமிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; துஞ்சினோரின் முதற் கனி அவரே.
21 மனிதன் வழியாய்ச் சாவு உண்டானது போல, மனிதன் வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் உண்டு.
22 ஆதாமில் அனைவரும் இறந்ததுபோல கிறிஸ்துவில் எல்லாரும் உயிர்பெறுவர்.,
23 அதை ஒவ்வொருவனும் குறிப்பிட்ட வரிசையின்படி பெறுவான். முதற்கனியாகக் கிறிஸ்து உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் அவருடைய வருகையின்போது உயிர்பெறுவார்.
24 அதன் பின்னர் முடிவு வரும்; அப்போது, தலைமை ஏற்போர், ஆட்சி புரிவோர், வலிமை மிக்கோர் அனைவரையும் அவர் தகர்த்துவிட்டுக் கடவுளும் தந்தையுமானவரிடம் அரசை ஒப்படைப்பார்.
25 பகைவர் அனைவரையும் அவரது கால்மணை ஆக்கும்வரை அவர் அரசாள வேண்டியிருக்கிறது.
26 இறுதிப் பகைவனாகத் தகர்க்கப்படுவது சாவு.
27 ' அனைத்தையும் அவருக்கு அடிப்பணியச் செய்தார் ' என்றுள்ளதன்றோ? 'அனைத்தும் அடிபணிந்துள்ளன ' என்று சொல்லும்போது அனைத்தையும் அவருக்கு அடிபணியச் செய்த இறைவன் அடிபணியவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
28 அனைத்தும் அவருக்கு அடிபணிந்திருக்கும்போது, கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்படி, மகனும் அனைத்தையும் தமக்குப் பணிச்செய்த இறைவனுக்குத் தாமே அடிபணிவார்.
29 மேலும் இறந்தவர்களுக்காகச் சிலர் ஞானஸ்நானம் பெறுகிறார்களே, உயிர்த்தெழுதல் இல்லையென்றால் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தவர்கள் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவானேன்?
30 நாங்கள் கூட எந்நேரமும் ஆபத்துகளுக்கு உள்ளாவதேன் ?
31 ஆம் நாடோறும் நான் மரண வாயிலில் நிற்கிறேன். சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உங்களைக் குறித்து நான் கொண்டிருக்கிற பெருமையின்மேல் ஆணையாக இதைச் சொல்லுகிறேன்.
32 எபேசு நகரில் கொடிய விலங்குகளோடு நான் போராடினேனே, அதை நான் மனித நோக்கத்திற்காகச் செய்திருந்தால், அதனால் எனக்கு என்ன பயன்? இறந்தோர் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், ' உண்போம், குடிப்போம்; நாளைக்கு மடிவோம். '
33 ஏமாந்து போக வேண்டாம்; ' தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் '
34 மயக்கம் தெளிந்து, நீதியோடு ஒழுகி, பாவத்தை விட்டு விலகுங்கள். உங்களுள் சிலர் கடவுளை அறியாதவர் போல் இருக்கின்றனர்; உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.
35 ஆயினும், ' இறந்தோர் எப்படி உயிர்த்தெழுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள் ?' என்று ஒருவன் கேட்கலாம்.
36 அறிவிலியே, நீ விதைப்பது மடிந்தாலொழிய, புத்துயிர் பெறாது;
37 முளைக்கபோகும் உருவத்தில் நீ அதை விதைக்கவில்லை; வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோ நீ விதைக்கிறாய்.
38 கடவுளோ தமது விருப்பம்போல் அதற்கு உருவம் தருகிறார்; ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவத்தையே தருகிறார்.
39 எல்லா ஊனும் ஒரே ஊனன்று; மனிதரின் ஊன் வேறு, விலங்குகளின் ஊன் வேறு, மீன்களின் ஊன் வேறு
40 விண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு, மண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு, மண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு.
41 கதிரோனின் சுடர் வேறு, நிலவின் சுடர் வேறு, விண்மீன்களின் சுடர் வேறு. சுடரில் விண்மீனுக்கு விண்மீன் வேறுபடுகிறது.
42 இவ்வாறே, இறந்தோர் உயிர்த்தெழுதலும் இருக்கும். விதைக்கபடுவது அழிவுக்குரியது, உயிர்த்தெழுவதோ அழியாதது.
43 விதைக்கப்படுவது இழிவானது, உயிர்த்தெழுவதோ மாட்சிமைக்குரியது. விதைக்கப்படுவது வலுவற்றது. உயிர்த்தெழுவதோ வலிமையுள்ளது,.
44 விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல்.
45 மனித உயிர் கொண்ட உடல் உள்ளதுபோல, தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலும் உள்ளது. மறைநூலில் உள்ளபடி முதல் மனிதனாகிய ஆதாம் மனித உயிருள்ளவன் ஆனான்.
46 கடைசி ஆதாமோ உயிர் தரும் ஆவியானார். முதலில் உண்டானது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்டதன்று, மனித உயிர்கொண்டது தான்; தேவ ஆவிக்குரியது பிந்தியதே.
47 முதல் மனிதன் மண்ணிலிருந்து வந்தான். அவன் மண்ணைச் சார்ந்தவன். இரண்டாம் மனிதனோ விண்ணிலிருந்து வந்தார்.
48 மண்ணைச் சார்ந்த அவன் எப்படியோ, அப்படியே மண்ணைச் சார்ந்த யாவரும் உள்ளனர்; விண்ணைச் சார்ந்த இவர் எப்படியோ, அப்படியோ விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
49 ஆகவே, மண்ணைச் சார்ந்தவனின் சாயலைத் தாங்கியிருந்தது போல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் தாங்கியிருப்போம்.
50 சகோதரர்களே, நான் சொல்வது இதுவே; ஊனும் இரத்தமும் கடவுளின் அரசை உரிமையாகப் பெற முடியாது; அழிவுள்ளது அழியாமையை உரிமையாகப் பெறாது.
51 இதோ உங்களுக்கு மறைபொருளானது ஒன்று சொல்லப்போகிறேன்; நாம் அனைவருமே சாகமாட்டோம்; ஆனால் அனைவருமே வேற்றுரு பெறுவோம்.
52 ஒரு நொடியில், கண்ணிமைப் பொழுதில், கடைசி எக்காளம் முழங்க இது நடைபெறும். ஆம், எக்காளம் முழங்கும்; அப்பொழுது இறந்தோர் அழிவில்லாதவர்களாய் உயிர்த்தெழுவர்; நாமும் வேற்றுரு பெறுவோம்.
53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்துகொள்ள வேண்டும்; சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்துகொள்ள வேண்டும்.
54 அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையையும், சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையையும் அணிந்துகொள்ளும் பொழுது, எழுதியுள்ள இவ்வாக்கு நிறைவேறும்:
55 ' சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?'
56 பாவமே சாவின் கொடுக்கு; பாவத்திற்கு வலிமை தருவது சட்டம்.
57 ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நமக்கு இந்த வெற்றிதரும் கடவுளுக்கு நன்றி.
58 ஆகையால், என் அன்பார்ந்த சகோதரர்களே, உறுதியாய் இருங்கள், நிலை பெயராதீர்கள். உங்கள் உழைப்பு ஆண்டவருக்குள் வீணாவதில்லை என்பதை அறிந்து, ஆண்டவரின் வேலையைச் செய்வதில் சிறந்து விளங்குங்கள்.

1-Corinthians 15:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×