1
|
சகோதரர்களே, ஆவிக்குரிய வரங்களைப் பற்றி நீங்கள் அறியாதிருக்க வேண்டாம். |
2
|
நீங்கள் புறச் சமயத்தினராய் இருந்தபோது உங்களுக்கு உண்டான ஏவுதல் எல்லாம் ஊமைச் சிலைகள்பால் தான் உங்களை ஈர்த்தது. இது உங்களுக்குத் தெரிந்ததே அன்றோ? |
3
|
ஆதலால் உங்களுக்கு நான் அறிவிப்பது: கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் பேசும் போது, ' இயேசுவுக்குச் சாபம்' என்று யாரும் சொல்லுவதில்லை. அப்படியே பரிசுத்த ஆவியின் ஏவுதலாலன்றி ' இயேசு ஆண்டவர் ' என்று யாரும் சொல்லமுடியாது. |
4
|
வரங்கள் பலவகை; ஆவியானவரோ ஒருவர்தான். |
5
|
திருப்பணிகள் பலவகை; ஆண்டவரோ ஒருவர் தான். |
6
|
ஆற்றல் மிக்க செயல்கள் பல வகை; கடவுளோ ஒருவர் தான். அவரே அனைத்தையும் அனைவரிலும் செயலாற்றுகிறார். |
7
|
ஆவியானவரின் செயல் வெளிப்படும் ஆற்றல் அவனவனுக்கு அருளப்படுவது பொது நன்மைக்காகவே. |
8
|
ஒருவனுக்கு ஆவியின் வழியாக ஞானம் நிறைந்த பேச்சு அருளப்படுகிறது. மற்றவனுக்கு அறிவு செறிந்த பேச்சு அளிக்கப்படுவது அதே ஆவியின் ஆற்றலால்தான். |
9
|
வேறொருவனுக்கு விசுவாசம் அருளப்படுவது அதே ஆவியால்தான். பிறிதொருவனுக்கு நோய்களைக் குணமாக்கும் வரம் கிடைப்பது அவ்வொரே ஆவியால் தான். |
10
|
ஒருவனுக்குப் புதுமை செய்யும் ஆற்றலும், இன்னொருவனுக்கு இறைவாக்கு வரமும், வேறொருவனுக்கு ஆவிகளைத் தேர்ந்து தெளியும் திறனும் வேறொருவனுக்குப் பல்வகைப் பரவசப் பேச்சும், பிறிதொருவனுக்கு அதை விளக்கும் திறனும் கிடைக்கின்றன. |
11
|
இவற்றையெல்லாம தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்துச் செயலாற்றுகிறவர் அந்த ஒரே ஆவிதான். |
12
|
உடல் ஒன்று, உறுப்புகள் பல; உடலின் உறுப்புகள் பலவகையாயினும், ஒரே உடலாய் உள்ளன; கிறிஸ்துவும் அவ்வாறே என்க. |
13
|
ஏனெனில், யூதர் அல்லது கிரேக்கர், அடிமைகள் அல்லது உரிமைக்குடிகள் யாராயினும் நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோம்; ஒரே ஆவியால் தாகந்தணியப் பெற்றோம். |
14
|
உடல் ஒரே உறுப்பன்று; பல உறுப்புகளால் ஆனது. |
15
|
நான் கையல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று கால் சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா? |
16
|
'நான் கண்ணல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று காது சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா? |
17
|
முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? |
18
|
ஆனால், கடவுள் ஒவ்வொரு உறுப்பையும் தாம் விரும்பியவாறு உடலில் அமைத்தார். |
19
|
அவையெல்லாம் ஒரே உறுப்பாய் இருப்பின், உடல் என்பது ஒன்று இருக்குமா? |
20
|
உண்மையில் உறுப்புகள் பல உள்ளன; உடலோ ஒன்றுதான். |
21
|
கண் கையைப் பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை" என்றோ, தலை கால்களைப் பார்த்து, "நீங்கள் எனக்குத் தேவையில்லை" என்றோ சொல்ல இயலாது. |
22
|
அதுமட்டுமன்று; வலுவற்றவையாய்த் தோன்றும் உறுப்புகளே மிகத் தேவையானவை; |
23
|
மதிப்புக் குறைவானவை என நாம் கருதும் உடலுறுப்புகளுக்கே மிகுதியான மதிப்பளித்துக் காக்கிறோம்; இழிவான உறுப்புகளே மிகுந்த மரியாதை பெறுகின்றன. |
24
|
மாண்புள்ளவற்றுக்கு அது தேவையில்லை; உடலை உருவாக்கியபோது கடவுள் மதிப்பில்லாதவற்றுக்குச் சிறப்பான மதிப்புத் தந்தார். |
25
|
உடலில் பிளவு ஏற்படாமல் ஒவ்வொன்றும் மற்ற உறுப்புகள்மேல் அக்கறை காட்டவேண்டும் என்றே இப்படிச் செய்தார். |
26
|
உறுப்பு ஒன்று துன்புற்றால், எல்லா உறுப்புகளும் அதனுடன் சேர்ந்து துன்புறும்; உறுப்பு ஒன்று மாண்புற்றால், எல்லா உறுப்புகளும் சேர்ந்து இன்புறும். |
27
|
நீங்களோ கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு. |
28
|
அவ்வாறே, திருச்சபையிலும் கடவுள், முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது இறைவாக்கினரையும், மூன்றாவது போதகரையும் எற்படுத்தினார்; பின்னர் புதுமை செய்யும் ஆற்றல், பின்பு நோய்களைக் குணமாக்கும் வரம், பிறர் சேவை, ஆளும் வரம், பல்வகைப் பரவசப் பேச்சு இவையுள்ளன. |
29
|
அனைவருமா அப்போஸ்தலர்? எல்லாருமா இறைவாக்கினர்? |
30
|
யாவரும் போதகரோ? எல்லாரும் நோய்களைக் குணமாக்கும் வரமுடையவரோ? எல்லாருமா பரவசப் பேச்சு பேசுகிறார்கள்? எல்லாருமா விளக்கம் சொல்லுகிறார்கள்? |
31
|
ஆனால், நீங்கள் ஆர்வமாய்த் தேடவேண்டியது மேலான வரங்களையே. அனைத்திலும் சிறந்த நெறியை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன். |
1-Corinthians 12:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...