1
|
மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது. உமது நாமத்தைத் துதிப்பது நல்லது. |
2
|
காலையில் உமது அன்பைப்பற்றியும் இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது. |
3
|
தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும், இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது. |
4
|
கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர். அக் காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம். |
5
|
கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர். உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது. |
6
|
உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள். நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம். |
7
|
களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள். அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும். |
8
|
ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர். |
9
|
கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள். தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள். |
10
|
ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர். பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன். விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர். உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர். |
11
|
என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன். என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன். |
12
|
[This verse may not be a part of this translation] |
13
|
[This verse may not be a part of this translation] |
14
|
வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள். அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள். |
15
|
கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள். அவர் என் பாறை அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை. |
Psalms 92:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...