1
|
கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான். கர்த்தர் ஒரு நகரத்தைக் கண் காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள். |
2
|
வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும். தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார். |
3
|
பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும். குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும். |
4
|
ஒரு இளைஞனின் மகன்கள் ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள். |
5
|
தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான். |
Psalms 127:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...