1
|
சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன். நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன். |
2
|
நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம். நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர். உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர். |
3
|
எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில் அப்பாவங்களை நீர் மன்னித்தருளும். |
4
|
தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர். நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம். |
5
|
தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும் . நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர். அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர். உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள். |
6
|
தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார். அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம். |
7
|
சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார். "சமுத்திரம்" போல ஜனங்களைத் தேவன் பூமியில் உண்டாக்கினார். |
8
|
நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள். சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும். |
9
|
நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர். நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர். தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர். இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்: |
10
|
உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர். வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர். நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர். இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர். |
11
|
நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக் கிறீர். பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர். |
12
|
பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின. |
13
|
புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். |
Psalms 65:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...