1
|
தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர். தயவாய் எங்களிடம் திரும்பி வாரும். |
2
|
நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர். நம் உலகம் பிரிந்து விழுந்தது. அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும். |
3
|
நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர். நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம். |
4
|
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர். அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும். |
5
|
உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்! என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும். |
6
|
தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்: "நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்! இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன். அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன். அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன். |
7
|
கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை. எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன். யூதா என் நியாயத்தின் கோல். |
8
|
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம் ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!" |
9
|
[This verse may not be a part of this translation] |
10
|
[This verse may not be a part of this translation] |
11
|
தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்! மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது! |
12
|
தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும். தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும். |
Psalms 60:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...