1
|
கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்? உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்? |
2
|
தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும். |
3
|
அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான். அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான். அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான். |
4
|
தேவனை வெறுப்போரை அவன் மதியான். ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான். அவன் அயலானுக்கு வாக்களித்தால் அவற்றைச் சரியாகக் கடைப் பிடிப்பான். |
5
|
அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான். குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான். அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான். |
Psalms 15:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...