1
|
கர்த்தர் அரசர். அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார். அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது, அது அசைக்கப்படுவதில்லை. |
2
|
தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது. தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்! |
3
|
கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச் சலுடையது. மோதும் அலைகள் இரைச்சலெ ழுப்புகின்றன. |
4
|
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர். |
5
|
கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும். உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும். |
Psalms 93:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...