1
|
தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும். |
2
|
தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். |
3
|
பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள். ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை. |
4
|
அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை. கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும். |
5
|
நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும். அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும். |
6
|
அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள். |
7
|
அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும். அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள். அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள். |
8
|
கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும். அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும். |
9
|
தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன். தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர். |
10
|
தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார். என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார். |
11
|
தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள். என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும். |
12
|
அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர். அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும். அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும். |
13
|
உமது கோபத்தில் அவர்களை அழியும். அவர்களை முற்றிலுமாக அழியும்! யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும் தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்! |
14
|
ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர். |
15
|
அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை. அவர்களுக்கு உறங்க இடமும் இராது. |
16
|
ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன். ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன். ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம். |
17
|
உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன். ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். நீரே என்னை நேசிக்கும் தேவன். |
Psalms 59:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...