1
|
தேவன் தேவர்களின் சபையில் நிற்கிறார். தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி. |
2
|
தேவன், "எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்? தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?" |
3
|
"ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள். அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். |
4
|
ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள். அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள். |
5
|
"அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள். அவர்கள் புரிந்துகொள்ளார்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!" என்கிறார். |
6
|
நான் (தேவன்), "நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய மகன்கள். |
7
|
ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள். பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்" என்று சொல்லுகிறேன். |
8
|
தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்! தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்! |
Psalms 82:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...