1
|
கர்த்தர் மேன்மையானவர். தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர். |
2
|
தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது. அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும். சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை. அதுவே பேரரசரின் நகரமாகும். |
3
|
அந்நகரத்து அரண்மனைகளில் தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார். |
4
|
ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள். |
5
|
அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள். |
6
|
அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள். |
7
|
தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால் பெருங் கப்பல்களை உடைத்தீர். |
8
|
ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார். |
9
|
தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம். |
10
|
தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர், பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர். நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம். |
11
|
தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது. யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன. |
12
|
சீயோனைச் சுற்றி நட. நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார். |
13
|
அந்த உயர்ந்த சுவர்களைப் பார். சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம். |
14
|
இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார். |
Psalms 48:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...