1
|
அவர்கள் எல்லாரும் கூட்டமாக எழுந்து, பிலாத்திடம் அவரைக் கூட்டிச்சென்றனர். |
2
|
இவன் நம் மக்களிடையே குழப்பம் உண்டாக்குகிறன். செசாருக்கு வரிசெலுத்தக் கூடாதென்கிறான். 'தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். இப்படியெல்லாம் இவன் செய்யக்கண்டோம்" என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினர். |
3
|
நீ, யூதரின் அரசனோ?" என்று பிலாத்து வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார். |
4
|
அப்போது, பிலாத்து தலைமைக்குருக்களையும் மக்களையும் நோக்கி, "இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்" என்றார். |
5
|
அவர்கள், " கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று வற்புறுத்திக்கூறினார்கள். |
6
|
இதைக் கேட்டதும், பிலாத்து, " இவன் கலிலேயனா ? " என்று வினவினார். |
7
|
அவர் ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்ததும், அந்நாட்களிலே யெருசலேமில் தங்கியிருந்த எரோதிடம் அவரை அனுப்பினார். |
8
|
ஏரோது இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான். ஏனெனில், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, அவர் அருஞ்செயல் எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான். |
9
|
பற்பல கேள்விகளை அவரிடம் கேட்டான். அவரோ அவனுக்கு மறுமொழியே கூறவில்லை. |
10
|
தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அவர்மீது மும்முரமாகக் குற்றஞ்சாட்டியவண்ணம் நின்றனர். |
11
|
ஏரோது தன் படையோடு சோர்ந்து அவரை அவமானப்படுத்தி, எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான். |
12
|
அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதும் பிலாத்தும் அன்றே நண்பராயினர். |
13
|
பிலாத்து தலைமைக்குருக்களையும் தலைவர்களையும் மக்களையும் ஒன்று கூட்டி, |
14
|
அவர்களை நோக்கி, "மக்களிடையே குழப்பம் உண்டாக்குபவன் என்று இவனை என்னிடம் கொண்டுவந்தீர்களே. இதோ! உங்கள் முன்னிலையில் ஓன்றும் இவனிடம் நான் காணவில்லை. |
15
|
ஏரோதும் காணவில்லை. அவர் இவனை என்னிடம் திருப்பி அனுப்பிவிட்டார். |
16
|
சாவுக்குரியதொன்றும் இவன் செய்யவில்லை. |
17
|
ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன்" என்றார். |
18
|
மக்களோ ஒருவாய்ப்பட, "இவனை ஒழித்துவிடும்; பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யும்" என்று உரக்கக் கத்தினர்- |
19
|
பரபாசோ நகரிலே நடந்த ஒரு குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததாகச் சிறைப்பட்டவன். |
20
|
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களிடம் பேசினார். |
21
|
அவர்களோ, "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினர். |
22
|
மூன்றாம் முறையாக அவர்களை நோக்கி, " இவன் செய்த தீங்கு என்ன? சாவுக்குரிய குற்றமொன்றும் இவனிடம் காணோம். ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன் " என்றார். |
23
|
அவர்களோ அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டனர். அவர்கள் கூச்சலே வெற்றிகண்டது. |
24
|
அவர்கள் கேட்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்பளித்தார். |
25
|
குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததற்காகச் சிறைப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலைசெய்தார். இயேசுவையோ அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார். |
26
|
அவரைக் கூட்டிச்செல்லும்போது வயலிலிருந்து வந்து கொண்டிருந்த சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனைப் பிடித்து, அவன்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின்னால் அதைச் சுமந்துபோகச் செய்தனர். |
27
|
திரளான மக்களும், அவருக்காக மாரடித்துக்கொண்டு புலம்பும் பெண்களும் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர். |
28
|
இயேசு அப்பெண்கள்பக்கம் திரும்பி, "யெருசலேம் மகளிரே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள். |
29
|
ஒருநாள் வரும்: அன்று, 'மலடிகள் பேறுபெற்றவர்கள்; பிள்ளைப்பேறற்ற வயிறுகளும் பாலூட்டாத கொங்கைகளும் பேறுபெற்றவை' என்பார்கள். |
30
|
அபபொழுது மலைகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்; 'குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள். என்று சொல்லத் தொடங்குவார்கள். |
31
|
பச்சைமரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால், பட்டமரத்திற்கு என்ன நேருமோ?" என்றார். |
32
|
மரணதண்டனைக்காக இரு குற்றவாளிகளையும் அவரோடே கூட்டிச்சென்றனர். |
33
|
மண்டை ஒடு' எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் மற்றவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர். |
34
|
இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைப் பகிர்ந்துகொள்ளச் சீட்டுப்போட்டனர். |
35
|
மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். தலைவர்களும், "மற்றவர்களைக் காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக்கொள்ளட்டும்!" என்று அவரை ஏளனம்செய்தனர். |
36
|
படைவீரர்களும் அணுகி அவருக்குக் காடியைக் கொடுத்து, |
37
|
நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர். |
38
|
'இவன் யூதரின் அரசன்' என்று எழுதியிருந்த பலகையை அவர் தலைக்கு மேல் வைத்திருந்தனர். |
39
|
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று!" என்று அவரைப் பழித்தான். |
40
|
மற்றவனோ, "கடவுள்மட்டில் உனக்கு அச்சமே இல்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாயிருக்கிறாய். |
41
|
நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று அவனைக் கடிந்துகொண்டான். |
42
|
பின்பு அவன், "இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" என்றான். |
43
|
அவனுக்கு இயேசு, "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார். |
44
|
அப்போது ஏறக்குறைய நண்பகல் வேளை. மூன்று மணிவரை கதிரோன் மறைந்திருக்க, நாடெங்கும் இருள் உண்டாயிற்று. |
45
|
ஆலயத்தின் திரை நடுவில் கிழிந்தது. |
46
|
தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரக்கக் கூவினார். இதைச் சொன்னதும் உயிர்நீத்தார். |
47
|
நிகழ்ததைக் கண்ட நூற்றுவர்தலைவன் "உள்ளபடியே, இவர் நீதிமான்தான்" என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்தினான். |
48
|
வேடிக்கை பார்க்கவந்த மக்கட்கூட்டம் நிகழ்ந்ததைக் கண்டு மார்பில் அறைந்துகொண்டு திரும்பியது. |
49
|
அவருக்கு அறிமுனமானவர்களும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்தொடர்ந்த பெண்களும் தொலைவில் நின்று இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர். |
50
|
சூசை என்ற ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்கத்தின் உறுப்பினர். நல்லவர், நீதிமான். |
51
|
அவர்களுடைய திட்டத்திற்கும் செயலுக்கும் அவர் இணங்கவில்லை. யூதர்களுடைய ஊராகிய அரிமத்தியாவைச் சார்ந்தவர்; கடவுளுடைய அரசை எதிர்ப்பார்த்திருந்தவர். |
52
|
அவர் பிலாத்துவை அணுகி இயேசுவின் உடலைக் கேட்டார். |
53
|
அதைச் சிலுவையிலிருந்து இறக்கி, கோடித் துணியில் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அதுவரை யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. |
54
|
அன்று ஆயத்த நாள். ஓய்வுநாள் தொடங்கும் வேளை. |
55
|
கலிலேயாவிலிருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்களும் சூசையுடன் கூடவேயிருந்து கல்லறையையும் உடலை அங்கு வைத்த வகையையும் கவனித்தனர். |
56
|
திரும்பிச் சென்று வாசனைப்பொருளையும் பரிமளத் தைலங்களையும் ஆயத்தப்படுத்தினர். கட்டளைப்படி ஓய்வுநாள் அனுசரித்தனர். |
Luke 23:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...