Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 10 Verses

1 {சாலொமோனின் நீதிமொழிகள்} [PS] சாலொமோனின் நீதிமொழிகள்: [QBR] ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; [QBR] மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். [QBR]
2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; [QBR] நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். [QBR]
3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; [QBR] துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். [QBR]
4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; [QBR] சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். [QBR]
5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; [QBR] அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். [QBR]
6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; [QBR] கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். [QBR]
7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; [QBR] துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். [QBR]
8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; [QBR] அலப்புகிற மூடனோ விழுவான். [QBR]
9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; [QBR] கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். [QBR]
10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; [QBR] அலப்புகிற மூடன் விழுவான். [QBR]
11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; [QBR] கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். [QBR]
12 பகை விரோதங்களை எழுப்பும்; [QBR] அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். [QBR]
13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; [QBR] மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. [QBR]
14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; [QBR] மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. [QBR]
15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; [QBR] ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். [QBR]
16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், [QBR] துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். [QBR]
17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; [QBR] திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். [QBR]
18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; [QBR] புறங்கூறுகிறவன் மதிகேடன். [QBR]
19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; [QBR] தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். [QBR]
20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; [QBR] துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. [QBR]
21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; [QBR] மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். [QBR]
22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; [QBR] அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். [QBR]
23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; [QBR] புத்திமானுக்கோ ஞானம் உண்டு. [QBR]
24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; [QBR] நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். [QBR]
25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; [QBR] நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; [QBR]
26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, [QBR] அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். [QBR]
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; [QBR] துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். [QBR]
28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; [QBR] துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். [QBR]
29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, [QBR] அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். [QBR]
30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; [QBR] துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. [QBR]
31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; [QBR] மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். [QBR]
32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; [QBR] துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது. [PE]
×

Alert

×