1
|
கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன். நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன். |
2
|
நீர் முழு பூமிக்கும் நீதிபதி. பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும். |
3
|
கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக் கைகளில் திளைத்திருப்பார்கள்? |
4
|
எதுவரைக்கும் அக்குற்றவாளிகள் அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்? |
5
|
கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள். உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள். |
6
|
அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள். பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள். |
7
|
அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள். |
8
|
தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள். நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்? கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும். |
9
|
தேவன் நமது காதுகளை உண்டாகினார். நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்! தேவன் நமது கண்களை உண்டாக்கினார். நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன. அவரால் நிகழ்வதைக் காணமுடியும்! |
10
|
தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார். தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார். |
11
|
ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார். வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார். |
12
|
கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான். சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார். |
13
|
தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர். தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர். |
14
|
கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை. உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை. |
15
|
நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும், அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வர்கள். |
16
|
தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை. தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை. |
17
|
கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால் நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்! |
18
|
நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன், ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார். |
19
|
நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன். ஆனால் கத்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர். |
20
|
தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். |
21
|
அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள். களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள். |
22
|
ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம். என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம். |
23
|
அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார். அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார். எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதி பதிகளை அழிப்பார். |
Psalms 94:17 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...