1
|
கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன். என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன். |
2
|
கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன். உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது. |
3
|
தேவன், "நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன். |
4
|
தாவீதே, உன் குடும்பம் என்றென்றும்நிலைத்திருக்கும்படிச் செய்வேன். என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்" என்றார். |
5
|
கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர். வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும். ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும். பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும். |
6
|
பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை. "தெய்வங்களில்" எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது. |
7
|
தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார். அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள். அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள். அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள். |
8
|
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. உம்மைநாங்கள் முழுமையாக நம்பமுடியும். |
9
|
நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர். அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும். |
10
|
தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர். உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர். |
11
|
தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை. உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர். |
12
|
வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர். தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும். |
13
|
தேவனே, உமக்கு வல்லமை உண்டு! உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே! |
14
|
உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள். |
15
|
தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள். |
16
|
உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும். அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள். |
17
|
நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன். அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும். |
18
|
கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா. |
19
|
உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், "கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன். அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம்வீரனை ஆற்றலுடையவனாக்கினேன். |
20
|
நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன். விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன். |
21
|
என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன். எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன். |
22
|
தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று. தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை. |
23
|
அவனது பகைவர்களை நான் அழித்தேன். நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன். |
24
|
நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன். அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன். |
25
|
நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன். அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான். |
26
|
அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை. நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான். |
27
|
நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன். அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான். |
28
|
நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும். அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது. |
29
|
அவன் குடும்பம் என்றென்றும் தொடரும், அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும். |
30
|
அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன். |
31
|
நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி, என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால், |
32
|
அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன். |
33
|
ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன். நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன். |
34
|
நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன். நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன். |
35
|
எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்! |
36
|
தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும். சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும். |
37
|
சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும். வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று. அந்த உடன்படிக்கையை நம்பலாம்" என்றீர். |
38
|
ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு, அவனைத் தன்னந்தனியாகவிட்டீர். |
39
|
நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர். நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர். |
40
|
அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர். அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர். |
41
|
கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள். அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர். |
42
|
நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர். |
43
|
தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினிர். உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. |
44
|
நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர். |
45
|
நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர். |
46
|
கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்? எதுவரைக்கும் நீர் எங்களை உதா சீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா? |
47
|
என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர். |
48
|
ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை. ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை. |
49
|
தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே? நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர். |
50
|
[This verse may not be a part of this translation] |
51
|
[This verse may not be a part of this translation] |
52
|
கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! ஆமென், ஆமென்! |
Psalms 89:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...