1
|
பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம். |
2
|
கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார். |
3
|
கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக் கூடும்? கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? யார் அங்கு வழிபட முடியும்? |
4
|
தீயவை செய்யாத ஜனங்களும், பரிசுத்த இருதயம் உடையோரும், பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் பயன்படுத் தாதோரும், பொய்யும், பொய்யான வாக்குறு திகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும். |
5
|
நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள். |
6
|
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள். |
7
|
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே! திறவுங்கள்! மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார். |
8
|
யார் இந்த மகிமைமிக்க அரசர்? கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன். |
9
|
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார். |
10
|
யார் அந்த மகிமை மிக்க அரசர்? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர். அவரே மகிமை மிக்க அரசர். |
Psalms 24:10 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...