1
|
கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். |
2
|
என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும். |
3
|
கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். |
4
|
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள். |
5
|
கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன். என் ஆத்துமா அவருக்காக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன். |
6
|
நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன். |
7
|
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும். கர்த்தர் நம்மை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறார். கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார். |
8
|
[This verse may not be a part of this translation] |
Psalms 130:7 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...