1 | தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். நீர் பரலோகத்தில் அரசராக வீற்றிருக்கிறீர். |
---|
2 | தங்களுக்குத்Ԕ தேவையான பொருள்களுக்காக அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள். |
---|
3 | அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம். நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம். |
---|
4 | கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும். நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும். |
---|