1
|
கர்த்தர் அரசர். எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். கேரூபின் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார். எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும். |
2
|
சீயோனில் கர்த்தர் மேன்மையானவர். ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர். |
3
|
எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக் கட்டும். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது. தேவன் பரிசுத்தர். |
4
|
வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார். தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர். யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர். |
5
|
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள். |
6
|
மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர். அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன். அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது அவர் அவர்களுக்குப் பதில் தந்தார். |
7
|
உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார். அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார். |
8
|
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர். ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும், மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர். |
9
|
[This verse may not be a part of this translation] |
Psalms 99:7 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...