1
|
கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். |
2
|
கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக. |
3
|
சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. |
4
|
எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது. |
5
|
எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார். |
6
|
வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார். |
7
|
தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார். |
8
|
அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார். |
9
|
ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். கர்த்தரைத் துதியுங்கள்! |
Psalms 113:8 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...