“அவர் கன்மலை; [QBR] அவருடைய செயல் உத்தமமானது; [QBR] அவருடைய வழிகளெல்லாம் நியாயம், [QBR] அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; [QBR] அவர் நீதியும் செம்மையுமானவர். [QBR]
அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; [QBR] இதுவே அவர்களுடைய காரியம்; [QBR] அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். [QBR]
ஆரம்பநாட்களை நினை; [QBR] தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; [QBR] உன் தகப்பனைக் கேள், [QBR] அவன் உனக்கு அறிவிப்பான்; [QBR] உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். [QBR]
“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், [QBR] அவனை நடத்தினார், [QBR] அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். [QBR]
கழுகு தன் கூட்டைக் கலைத்து, [QBR] தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, [QBR] தன் இறக்கைகளை விரித்து, [QBR] குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, [QBR]
பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; [QBR] வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; [QBR] கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் [QBR] அவன் சாப்பிடும்படி செய்தார். [QBR]
அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; [QBR] தாங்கள் அறியாதவைகளும், [QBR] தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், [QBR] புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். [QBR]
என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; [QBR] அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; [QBR] அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; [QBR] உண்மையில்லாத பிள்ளைகள். [QBR]
தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, [QBR] தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; [QBR] ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, [QBR] மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன். [QBR]
நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், [QBR] நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, [QBR] மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். [QBR]
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், [QBR] யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, [QBR] இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? [QBR]
அவர்களுடைய திராட்சைச்செடி, [QBR] சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, [QBR] அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது. [QBR]
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; [QBR] ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; [QBR] அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; [QBR] அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும். [QBR]
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, [QBR] பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் [QBR] அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? [QBR]
“நான் நானே அவர், [QBR] என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; [QBR] நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; [QBR] நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; [QBR] என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. [QBR]
மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, [QBR] என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, [QBR] என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். [QBR]
கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; [QBR] என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். [QBR]
“மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, [QBR] தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, [QBR] தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”. [PE][PS]
அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான். [PS]
“நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.