Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Luke Chapters

Luke 4 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Luke Chapters

Luke 4 Verses

1 இயேசு பரிசுத்த ஆவியால் நிறைந்தவராய் யோர்தான் ஆற்றங்கரையினின்று திரும்பியபின், பாலைவனத்தில் தங்குமாறு ஆவியானவரால் நடத்தப்பெற்றார்.
2 அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் கழிந்ததும், அவருக்குப் பசியெடுத்தது.
3 அப்பொழுது அலகை அவரை நோக்கி, "நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்" என்றது.
4 அதற்கு இயேசு, "மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று' என எழுதி இருக்கின்றதே" என்றார்.
5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலக அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,
6 "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 'என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.
7 எனவே நீர் தெண்டனிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவை ஆகும்" என்றது.
8 அதற்கு இயேசு, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரைமட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றதே " என்றார்.
9 பின்னர் அலகை அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்.
10 ஏனெனில், ' உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் ' என்றும்,
11 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று எழுதியுள்ளது" என்றது.
12 அதற்கு இயேசு, "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே' என்றும் சொல்லியிருக்கிறது " என்றார்.
13 இவ்வாறு, அலகை எல்லா விதத்திலும் இயேசுவைச் சோதித்தபின், குறித்த காலம் வரும்வரைக்கும் அவரை விட்டுச் சென்றது.
14 பின்னர், ஆவியானவரின் வல்லமை பூண்டவராய் இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
15 யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார். யாவரும் அவரை மகிமைப்படுத்தினர்.
16 அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்தார். வழக்கப்படி ஓய்வுநாளன்று செபக்கூடத்திற்கு வந்து வாசிக்க எழுந்தார்.
17 இசையாஸ் எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருளை அவரிடம் கொடுத்தனர். அதை விரித்ததும் பின்வரும் பகுதியைக் கண்டார்.
18 'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,
19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார் '.
20 பின்னர் ஏட்டைச் சுருட்டிப் பணிவிடைக் காரனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். செபக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே நோக்கியவண்ணமாயிருந்தன.
21 அப்போது அவர், " நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்று கூறலானார்.
22 யாவரும் அவரைப் பாராட்டி, அவர் வாயினின்று எழுந்த அருள்மொழிகளை வியந்து, " இவர் சூசையின் மகனன்றோ ?" என்றனர்.
23 பின் அவர் அவர்களை நோக்கி, "' மருத்துவனே, உன்னையே குணமாக்கிக்கொள் ' என்ற பழமொழியை எனக்கே சொல்லிக்காட்டி, ' கப்பர்நகூம் ஊரில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம், உம் சொந்த ஊராகிய இங்கேயும் செய்யும் ' எனக் கண்டிப்பாக நீங்கள் கூறுவீர்கள் " என்றார்.
24 மேலும், அவர், " உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை.
25 உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாசின் காலத்தில் மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்களாக வானம் வறண்டு நாடெங்கும் பஞ்சம் உண்டானபோது, இஸ்ராயேல் நாட்டில் கைம்பெண்கள் பலர் இருந்தனர்.
26 ஆயினும் சீதோன் நாட்டின் சரெப்தா ஊர்க் கைம்பெண் ஒருத்தியிடமின்றி வேறு எவரிடமும் எலியாஸ் அனுப்பப்படவில்லை.
27 இறைவாக்கினரான எலிசேயுவின் காலத்திலும் இஸ்ராயேல் நாட்டில் தொழுநோயாளர் பலர் இருந்தனர். ஆயினும் சீரியா நாட்டு நாமானைத் தவிர வேறு எவரும் குணமாக்கப்படவில்லை " என்றார்.
28 இவற்றைக் கேட்டுச் செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து,
29 அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.
30 அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்.
31 பின் கலிலேயா நாட்டுக் கப்பர்நகூம் ஊருக்கு வந்து, அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்.
32 அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.
33 அப்போது, செபக்கூடத்தில் அசுத்தப்போய் பிடித்த ஒருவன் இருந்தான்.
34 அவன், " ஐயோ! நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? எங்களைத் தொலைக்க வந்தீரோ ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் " என்று உரக்கக் கத்தினான்.
35 அப்போது இயேசுவா, " பேசாதே, இவனை விட்டுப் போ " என்று அதட்டினார். அப்பொழுது, அப்பேய் அவனை அவர்கள்நடுவே வீழ்த்தி, அவனுக்கு ஒரு தீங்குமிழைக்காமல் அவனை விட்டு அகன்றது.
36 அதனால் திகில் எல்லாரையும் ஆட்கொள்ள, " இவர் வார்த்தை எத்தகையதோ ? அதிகாரத்தோடும் வல்லமையோடும் இவர் அசுத்தப் பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவை போய்விடுகின்றனவே! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
37 அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெல்லாம் பரவியது.
38 பின்னர், அவர் செபக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்கு வந்தார். சீமோனுடைய மாமியார் கடுஙகாய்ச்சலால் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததால் அவளுக்காக அவரிடம் வேண்டினர்.
39 அவர் அவளருகில் நின்று காய்ச்சலைக் கடிந்துகொண்டார். காய்ச்சல் அவளை விட்டு அகல, அவள் உடனே எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.
40 பொழுது சாயும்வேளையில் யாவரும் தங்களிடையே இருந்த பற்பல பிணியாளரை அவரிடம் கொண்டுவந்தனர். ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்துக் குணமாக்கினார்.
41 பேய்கள், "நீரே கடவுளின் மகன்" என்று கூவிக்கொண்டு பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று அவை அறிந்திருந்ததால், இயேசு அவற்றை அதட்டிப் பேச விடவில்லை.
42 பொழுது புலரவே, அவர் புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடினர். அவரிடம் வந்ததும் தங்களை விட்டு அகலாதபடி அவரை நிறுத்தப்பார்த்தனர்.
43 அவரோ, " நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன் " என்று அவர்களிடம் கூறினார்.
44 அதன்படியே, கலிலேயாவின் செபக்கூடங்களில் தூது உரைத்துவந்தார்.

Luke 4:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×