Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 36 Verses

1 ஏதோம் எனப்பட்ட எசாயூவின் தலைமுறை அட்டவணையாவது:
2 எசாயூ கானான் நாட்டுப் பெண்களில் ஏலோனின் புதல்வியான ஆதாளையும், ஏவையனான செபெயோனின் புதல்வி அனாள் பெற்ற மகளாகிய ஒலிமாளையும் மணந்தான்.
3 மீண்டும் இஸ்மாயிலின் புதல்வியும் நபயோத்தின் சகோதரியுமான பசெமாத்தை மனைவியாகக் கொண்டான்.
4 ஆதாள் எலிபாசைப் பெற்றாள். பசெமாத் இராகுயேலைப் பெற்றாள்.
5 ஒலிபமாள் ஜெகூஸ், இயேலோன், கொறே முதலியோரைப் பெற்றாள். இவர்கள் எசாயூவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.
6 பின் எசாயூ தன் மனைவிகளையும், புதல்வர் புதல்விகளையும், தன் வீட்டைச் சேர்ந்த எல்லா மனிதரையும், பொருட்களையும், மந்தைகளையும், கானான் நாட்டில் சம்பாதித்திருந்த யாவற்றையும் சேர்த்துக் கொண்டு, தன் தம்பி யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனான்.
7 ஏனென்றால், அவர்கள் இருவரும் மிகுந்த செல்வம் படைத்தவர்களாய் இருந்ததனால், அவர்கள் ஒன்றாய்க் குடியிருக்கக் கூடாமற் போயிற்று. அவர்களுடைய மந்தை, கணக்கில் அடங்காமல் இருந்ததனால், அவர்கள் குடியிருந்த நாடு இனி அவர்களுக்குப் போதாதிருந்தது.
8 ஆகையால், எசாயூ செயீர் என்னும் மலையில் குடியேறினான். அவனுக்கு ஏதோம் என்றும் பெயர்.
9 செயீர் மலையிலிருக்கும் ஏதோமியரின் (குலத்) தந்தையாகிய எசாயூவின் சந்ததிகளும், அவன் புதல்வர்களின் பெயர்களுமாவன:
10 எசாயூவின் (முதல்) மனைவியான ஆதாளின் மகன் எலிபாசும், அவன் (இரண்டாம்) மனைவியாகிய பசெமாத்தின் மகன் இராகுயேலுமாவர்.
11 எலிபாசுக்குப் பிறந்த புதல்வர்: தேமான், ஓமார், செப்போ, காட்டம், கேனசு.
12 எசாயூவின் புதல்வனான எலிபாசுக்குத் தாமினாள் என்னும் மறுமனைவியும் இருந்தாள். இவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்களே எசாயூவின் மனைவியான ஆதாளின் புதல்வர்கள்.
13 இராகுயேலின் புதல்வர்: நகாட், ஜாரா, சம்மா, மேசா. இவர்களே எசாயூவின் மனைவியான பசெமாத்தின் புதல்வர்கள்.
14 செபெயோன் புதல்வி அனாளின் மகளும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமாளுக்கோ, ஜெகூஸ், இயேலோன், கொறே என்பவர்கள் பிறந்தனர்.
15 எசாயூவின் புதல்வருள்ளே தலைவர்களாய் இருந்தவர்கள் யாவரென்றால்: எசாயூவின் மூத்த மகனான எலிபாசின் புதல்வர்களாகிய தெமான், ஓமார், செப்போ, கெனேஸ்.
16 கொறே, காட்டம், அமலேக் ஆகிய இவர்கள் அனைவரும் எலிபாசுக்குப் பிறந்த எதோமியத் தலைவர்கள். இவர்களே ஆதாளின் மக்கள்.
17 எசாயூவின் புதல்வனான இராகுவேலின் மக்களில், நகாட், ஜாரா, சம்மா, மெசா ஆகியோர் இராகுவேலின் புதல்வரும் எசாயூவின் மனைவியான பசெமாத்தின் மக்களுமான ஏதோமியத் தலைவர்கள்.
18 எசாயூவின் மனைவி ஒலிபமாளின் புதல்வர்களோ: ஜெகூஸ், இயேலோன், கொறே. இவர்கள் அனாளின் புதல்வியும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமாளுடைய சந்ததியின் தலைவர்களாம்.
19 இவர்களே ஏதோம் எனப்பட்ட எசாயூவின் சந்ததி. இவர்களே அவர்களுள் இருந்த தலைவர்கள்.
20 அந்த நாட்டின் குடிகளாய் இருந்த ஓறையனான செயீரின் புதல்வர் யாரெனில்: லொத்தானும், சொபாலும், செபெயோனும்,
21 அனாவும், டிசோனும், எசேரும், டிசானும் ஆவர். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த செயீரின் புதல்வராகிய ஒறையாத் தலைவர்களாவர்.
22 லொத்தானுக்குப் பிறந்த புதல்வர்கள்: ஓரியும் எமானுமாவர். தமினாள் லொத்தானின் சகோதரியாவாள்.
23 சொபாலின் புதல்வர்கள்: அல்வானும், மனகாட்டும், ஏபாலும், செப்போவும், ஒனாமுமாவர்.
24 செபெயோனின் புதல்வர்களோ: அயாவும், அனாவும் ஆவர். இந்த அனாவே தன் தந்தை செபெயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது பாலைவனத்தில் வெப்ப நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தான்.
25 இவனுக்கு டிசோன் என்னும் ஒரு புதல்வனும், 'ஒலிபமாள் என்னும் ஒரு புதல்வியும் பிறந்தனர்.
26 டிசோனின் புதல்வர்கள்: ஆதாமும், எசெபானும், ஜெத்திராமும், காரானும் ஆவர்.
27 எசேரின் புதல்வர்: பாலனும், ஜவானும், அக்கானும்.
28 டிசானோ: ஊஸ், ஆராம் என்ற (இரு) புதல்வரைப் பெற்றான்.
29 ஓறையரின் தலைவர்கள் யாவரெனில்: லொத்தான், சொபால், செபெயோன், அனா, டிசோன், எசேர், டிசான் ஆவர்.
30 இவர்களே செயீர் நாட்டில் ஆட்சி புரிந்த ஓறையரின் தலைவர்களாம்.
31 இஸ்ராயேல் புதல்வர்மேல் எந்த அரசனும் அரசாள்வதற்கு முன், எதோம் நாட்டில் ஆண்டு வந்த அரசர்கள் யாவரென்றால்:
32 (முதலில்) பேயோரின் புதல்வனாகிய பேலா.
33 இவன் தலைநகரின் பெயர் தெனபா. பேலா இறந்த பின், பொஸ்றா நகரத்தானும் ஜாராவின் புதல்வனுமான ஜோபாத் ஆண்டு வந்தான்.
34 ஜோபாதும் இறந்த பின்னர், தேமானரின் நாட்டானாகிய ஊசாம் அரசாண்டான்.
35 இவனும் இறந்தபின், பதாதின் புதல்வனாகிய ஆதாத் அரசாண்டான். இவனே மேவாப் நாட்டில் மதியானியரைத் தோற்கடித்தான்.
36 இவனது தலைநகரின் பெயர் ஆவிட். ஆதாத் இறந்தபின், மஸ்றேக்கா ஊரானாகிய செமிலா பட்டம் பெற்றான்.
37 இவன் இறந்த பின், ரொகொபொட் நதியருகில் வாழ்ந்தவனான சாவூல் ஆண்டு வந்தான்.
38 இவன் இறந்த பின், அக்கொபோரின் புதல்வனான பலனான் ஆட்சியைக் கைக்கொண்டான்.
39 இவனுக்குப்பின், ஆதார் ஆண்டு வந்தான். இவனது தலை நகரின் பெயர் பௌ. இவன் மனைவி பெயரோ, மேத்தபேல். இவள் மெசாபுக்கு மகளான மத்திரேத்தின் புதல்வி.
40 தங்கள் வம்சங்களின் படியும், உறைவிடங்களின்படியும், பெயர்களின்படியும் எசாயூவின் சந்ததியில் உதித்த தலைவர்களின் பெயர்களாவன: தம்னா, ஆஸ்வா, ஜேட்டேட்,
41 ஒலிபமா, ஏலா, பினோன்,
42 கெனேஸ், தெமான், மப்சார்.
43 மக்தியேல், கீறாம். இவர்கள் ஏதோமின் தலைவர்களாய்த் தங்கள் சொந்த நாட்டிலே அரசாண்டு வந்தனர். இந்த ஏதோமியர்களுக்குக் (குலத்) தந்தை எசாயூ.
×

Alert

×