Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 29 Verses

1 ஆகையால் யாக்கோபு (அங்கிருந்து) புறப்பட்டு, கீழ்த்திசை நாடு போய்ச் சேர்ந்தான்.
2 அங்கே வயல் வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டான். அந்தக் கிணற்றிலிருந்து தான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
3 ஆடுகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தபின் மேய்ப்பர்கள் கல்லைப் புரட்டுவார்கள். அவை வேண்டிய மட்டும் குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின் மேல் தூக்கி வைப்பது வழக்கம்.
4 யாக்கோபு மேய்ப்பர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் எந்த ஊர் என, அவர்கள்:
5 நாங்கள் ஆரானூர் என்றார்கள். மீண்டும் அவன்: நாக்கோரின் மகனான லாபானை அறிவீர்களா என்று வினவ, அவர்கள்: அறிவோம், என்றனர்.
6 அவர் நலமுடன் இருக்கிறாரா என்று (யாக்கோபு) கேட்க, (அவர்கள்:) அவன் நலமாய்த் தான் இருக்கிறான். அதோ! அவன் மகள் இராக்கேல் தன் மந்தையோடு வருகிறாள் என்றனர்.
7 அப்பொழுது யாக்கோபு: இன்னும் பொழுது சாய அதிக நேரம் செல்லும். இது மந்தைகளைக் கொண்டு போய்ப் பட்டியில் சேர்க்கிற நேரம் அல்லவே. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுங்கள். பின் அவைகளை இன்னும் மேய விடலாம் என்றான்.
8 அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் ஒன்று சேருமுன் அப்படிச் செய்யலாகாது. அவை சேர்ந்த பின், கிணற்று வாயினின்று கல்லைப் புரட்டி ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்று சொன்னார்கள்.
9 இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இராக்கேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள். ஏனென்றால், அவளே மந்தையை மேய்த்து வந்தாள்.
10 யாக்கோபு அவளைக் கண்டவுடனே, அவள் தன் மைத்துனி என்றும், ஆடுகள் தன் மாமன் லாபானுடையவை என்றும் தெரிந்து கொண்டு, கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, மந்தைக்குத் தண்ணீர் காட்டினான்.
11 பின் இராக்கேலை முத்தம் செய்து உரத்த சத்தமிட்டு அழுதான்.
12 பின், தான் அவள் தந்தைக்குச் சகோதரனும் இரெபேக்காளுடைய மகனுமென்று அவளுக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டு அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.
13 தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன், லாபான் அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனை அரவணைத்துப் பன்முறை முத்தம் செய்து தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனான். மேலும் அவன் பிரயாணத்தின் காரணங்களைக் கேள்விப் பட்டதும் யாக்கோபை நோக்கி:
14 நீ என் எலும்பும் மாமிசமுமானவன் அன்றோ என்றான். அங்கே ஒருமாத காலம் முடிந்த பின், லாபான் யாக்கோபை நோக்கி:
15 நீ என் சகோதரன் என்பதற்காகச் சும்மா எனக்கு வேலை செய்யலாமா? நீ சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல் என்றான்.
16 லாபானுக்கு இரண்டு புதல்விகள் இருந்தனர். மூத்தவளுடைய பெயர் லீயாள்; இளையவள் பெயர் இராக்கேல். ஆனால் லீயாள் பீளைக்கண் உடையவள்.
17 இராக்கேலோ வடிவழகும் முக எழிலும் உள்ளவள்.
18 யாக்கோபு இவள்மேல் விருப்பம் கொண்டு: உம்முடைய இளைய புதல்விக்காக நான் உம்மிடம் ஏழாண்டுகள் வேலை செய்கிறேன் என்றான்.
19 அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய ஆடவனுக்குக் கொடுப்பதைவிட உனக்குக் கொடுப்பது மேல். என்னோடு தங்கியிரு என்றான்.
20 அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் இராக்கேலை முன்னிட்டு வேலை செய்து வந்தான். ஆனால், அவள் மீது அவன் வைத்திருந்த அன்பின் மிகுதியால் அவ்வேழாண்டுகள் அவனுக்குக் கொஞ்ச நாளாகவே தோன்றின.
21 பின் யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் மனைவியோடு சேரும் பொருட்டு அவளை எனக்குத் தாரும். ஏனென்றால், குறித்த காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றான்.
22 அவன் நண்பர்களைப் பெருங்கூட்டமாக விருந்துக்கழைத்துத் திருமண விழாவைக் கொண்டாடி முடித்தான்.
23 ஆனால், அந்தி வேளையிலே அவன் தன் புதல்வி லீயோளை அழைத்துக் கொண்டுபோய் அவனிடம் விட்டான்.
24 அவளுக்கு ஊழியம் செய்ய ஜெல்பாளைக் கொடுத்தான்.
25 யாக்கோபு வழக்கப்படி லீயாளோடு படுத்திருந்தது, காலையிலே அவள் லீயாளென்று கண்டு, தன் மாமனாரை நோக்கி: நீர் எனக்கு இப்படி ஏன் செய்தீர்? இராக்கேலுக்காக அல்லவா நான் உமக்கு வேலை செய்தேன்? என்னை இப்படி வஞ்சிப்பானேன் என்றான்.
26 அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளைய பெண்ணைக் கொடுப்பது இவ்விடத்தில் வழக்கமல்லவே.
27 (ஆகையால்) நீ இவளோடு கூடி வாழ்ந்து ஏழு நாட்களை நிறைவேற்று. பின் இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் இராக்கேலையும் உனக்குக் கொடுப்பேன் என்றான்.
28 யாக்கோபு அவ்வாறே செய்ய இசைந்தான். அந்த ஏழு நாட்களுக்குப் பின் இராக்கேலை மணமுடித்தான்.
29 லாபான் இவளுக்குப் பாளாளைப் பணிப்பெண்ணாகத் தந்திருந்தான்.
30 யாக்கோபு தான் அத்தனை நாள் ஆசித்திருந்த பெண்ணைக் கொண்ட பின், முந்தினவளைக் காட்டிலும் பிந்தினவளை அதிகமாய் நேசித்து, இன்னும் ஏழாண்டுகள் லாபானிடம் பணிபுரிந்து வந்தான்.
31 ஆனால், யாக்கோபு லீயாளை அற்பமாய் எண்ணுகிறானென்று ஆண்டவர் கண்டு, அவள் கருத்தாங்கும்படி செய்தார். இவள் தங்கையோ மலடியாய் இருந்தாள்.
32 லீயாள் கருத்தாங்கி ஒரு புதல்வனைப் பெற்றாள். ஆண்டவர் எனது தாழ்மையைக் கண்டருளினார்; இனி மேல் என் கணவர் எனக்கு அன்பு செய்வார் என்று கூறி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
33 மீண்டும் (அவள்) கருத்தாங்கி ஒரு புதல்வனை ஈன்றபோது: நான் அற்பமாய் எண்ணப்பட்டிருப்பதை ஆண்டவர் அறிந்தமையால், இவனையும் எனக்குத் தந்தருளினார் என்று சொல்லி, அவனுக்குச் சிமையோன் என்று பெயரிட்டாள்.
34 அவள் மூன்றாம் முறை கருவுற்று இன்னொரு புதல்வனைப் பெற்றாள். இனிமேல் என் கணவர் என் மீது அன்பாய் இருப்பார். அவருக்கு மூன்று மக்களைப் பெற்றேனன்றோ? என்று, இதை முன்னிட்டு அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.
35 அன்றியும், நான்காம் முறையாக கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்றாள். இப்பொழுது ஆண்டவரைத் துதிப்பேன் என்று சொல்லி, அதன் பொருட்டு அவனை யூதா என்று அழைத்தாள். பின் அவளுக்குப் பிள்ளை பேறு நின்று போயிற்று.
×

Alert

×