Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Corinthians Chapters

2 Corinthians 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Corinthians Chapters

2 Corinthians 1 Verses

1 கொரிந்து நகரில் இருக்கும் கடவுளின் சபைக்கும், அக்காயா முழுவதிலுமுள்ள இறை மக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான சின்னப்பனும் சகோதரனான தீமோத்தேயுவும் எழுதுவது:
2 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகுக.
3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றப்பெறுவாராக! அவர் இரக்கம் நிறைந்த தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான கடவுள்.
4 அவரே எங்களுக்கு எல்லாவகை வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு கடவுளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலால், நாங்களும் எத்தகைய வேதனையுறுவோர்க்கும் ஆறுதலளிக்க முடிகிறது.
5 ஏனெனில், கிறிஸ்துவின் பாடுகள் எங்கள் வாழ்வில் மிகுந்திருப்பது போல், கிறிஸ்துவின் வழியாய் வரும் ஆறுதலும் மிகுந்திருக்கிறது.
6 நாங்கள் வேதனைக்குள்ளானால், அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவுமே; நாங்கள் ஆறுதல் அடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் படும் அதே பாடுகளை நீங்களும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளவே அந்த ஆறுதல் செயலாற்றுகிறுது.
7 ஆகவே, உங்களைப்பற்றி எங்களுக்குள்ள நம்பிக்கை உறுதியாய் உள்ளது; ஏனெனில், பாடுகளில் நீங்கள் பங்குபெறுவது போலவே ஆறுதலிலும் பங்கு பெறுவீர்கள் என்று அறிவோம்.
8 ஏனெனில், சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு நேர்ந்த வேதனை உங்களுக்குத் தெரியுமன்றோ? அது எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டியது; எங்களால் தாங்கமுடியாத சுமையாயிற்று; இனி பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமற் போயிற்று; இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறோம்.
9 சாகவேண்டுமென்ற தீர்ப்பு கிடைத்துவிட்டது போலவே மனத்தில் நினைத்துக்கொண்டோம். ஆனால், நாங்கள் எங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இறந்தோரை உயிர்ப்பிக்கும் கடவுள் ஒருவர்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டுமென உணரவே இவ்வாறு நிகழ்ந்தது.
10 அவரே எங்களை இத்துணை அச்சத்துக்குரிய சாவினின்று விடுவித்தார்; இனிமேலும் விடுவிப்பார்.
11 ஆம் நீங்களும் எங்களுக்காக வேண்டுதல் செய்து, துணை புரிந்தால், இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்னும் நம்பிக்கை அவர்மேல் வைத்திருக்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்கென மன்றாடி, இந்த வரத்தைப் பெறும்பொழுது அதற்காகப் பலரும் எங்கள் சார்பில் நன்றி செலுத்துவர்.
12 மக்களிடையே, குறிப்பாக உங்களிடம் நாங்கள் உலக ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளையே பின்பற்றி, கடவுளிடமிருந்து வரும் நேர்மையோடும், கள்ளமற்ற உள்ளத்தோடும் நடந்து வருகிறோம் என எங்கள் மனச்சான்று சாட்சி பகர்கிறது;
13 அதுவே எங்கள் பெருமை, ஏனெனில், நாங்கள் எழுதும் கடிதங்களில் நீங்கள் படித்துக் கண்டுணர்வதைத் தவிர வேறெந்தப் பொருளும் மறைந்தில்லை.
14 இப்பொழுது எங்களைப்பற்றி உங்களுக்கு ஒரளவுதான் தெரியும்; ஆனால் நம் ஆண்டவராகிய இயேசுவின் நாளில், எப்படி நாங்கள் உங்களைப்பற்றி பெருமை பாராட்டிக்கொள்வோமோ, அப்படியே நீங்களும் எங்களைப் பற்றிப்பெருமை பாராட்டிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் முற்றிலும் தெரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
15 இந்த நம்பிக்கையால் தான் உங்களுக்கு இரட்டிப்பான நன்மை தரும்படியே முதலில் உங்களிடம் வர எண்ணம் கொண்டிருந்தேன்.
16 உங்கள் நகரத்துக்கு வந்து, அங்கிருந்து மக்கெதோனியாவுக்குப் போய், உங்கள் ஊருக்குத் திரும்பியிருப்பேன்; அப்போது நீங்கள் என்னை யூதேயாவுக்கு வழி அனுப்பியிருப்பீர்கள்.
17 இவ்வாறு திட்டமிட்டபோது நான் எண்ணிப்பாராமல் செய்தேனே? நான் திட்டமிடுவதை மனிதப் போக்கின்படி திட்டமிடுகிறேனோ? ஒரே சமயத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் சொல்பவனா நான்?
18 உங்களிடம் நான் பேசும்போது, ஆம் என்பதும், இல்லை என்பதும் கலந்தில்லை; உண்மையாம் கடவுளே இதற்குச் சாட்சி.
19 என் வழியாகவும், சில்வானு, தீமோத்தேயு வழியாகவும் உங்களிடையே அறிவிக்கப்பட்ட இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் ஆம் என்பதும், இல்லை என்பதும் கலந்தில்லை. ஆம் என்பது ஒன்றே அவரிடம் இருந்து வருகிறது.
20 ஏனெனில், கடவுளின் வாக்குறுதிகள் யாவற்றுக்கும் ஆம் என்பதே அவரிடம் இருந்தது. ஆகையால் தான் நாம் கடவுளுக்குப் புகழுரை கூறும் பொழுது, அவர் வழியாகவே ' ஆமென் ' என்கிறோம்
21 உங்களையும் எங்களையும் கிறிஸ்துவின் ஒன்றிப்பில் உறுதிப்படுத்தி நம்மை அபிஷுகம் செய்தவர் கடவுளே.
22 அவரே நம்மீது தம் முத்திரையிட்டு நம் உள்ளங்களில் இருக்கும்படி ஆவியானவரை அச்சாரமாக அளித்தார்.
23 கடவுளைச் சாட்சியாகக் கூப்பிட்டு, என் உயிரின்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன்: உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கமலிருக்கவே இதுவரை நான் கொரிந்து நகருக்கு வரவில்லை.
24 விசுவாசத்தைப் பொருத்தமாட்டில், உங்கள்மேல் நாங்கள் அதிகாரம் காட்டுகிறோம் என்று எண்ணாதீர்கள்; விசுவாசத்தில் நீங்கள் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள்; உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களோடு ஒத்துழைக்கிறோம்.

2-Corinthians 1:21 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×