Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Corinthians Chapters

1 Corinthians 14 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Corinthians Chapters

1 Corinthians 14 Verses

1 அன்பை நாடுங்கள்; அதன் பின் ஆவிக்குரிய வரங்களை ஆவலோடு தேடலாம்; சிறப்பாக இறைவாக்கு வரத்தை விரும்புங்கள்.
2 எனெனில், பரவசப் பேச்சுப் பேசுகிறவன் மனிதர்களிடம் பேசுவதில்லை; கடவுளிடமே பேசுகிறான்; அவன் பேசுவதை யாருமே புரிந்து கொள்வதில்லை; ஆவியின் ஏவுதலால் மறைபொருள்களையே பேசுகிறான்.
3 இறைவாக்கு உரைப்பவனோ மனிதர்களிடம் பேசுகிறான்; அவன் உரைப்பது ஞான வளர்ச்சி தருகிறது; ஊக்கம் ஊட்டுகிறது; ஆறுதல் அளிக்கிறது.
4 பரவசப் பேச்சுப் பேசுபவன் தான் மட்டும் ஞான வளர்ச்சி பெறுகிறான்; ஆனால், இறைவாக்கு உரைப்போன் திருச்சபை ஞான வளர்ச்சிப் பெறச் செய்கிறான்.
5 நீங்கள் எல்லாரும் பரவசப் பேச்சுத் தாராளமாய்ப் பேசலாம்; ஆனால், அதைவிட நீங்கள் இறைவாக்கு உரைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பரவசப் பேச்சுப் பேசுகிறவன் திருச்சபை ஞான வளர்ச்சியடையும் படி விளக்கமும் கூறினாலொழிய அவனைவிட இறைவாக்குரைப்பவனே மேலானவன்.
6 சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து,. உங்களுக்குத் திருவெளிப்பாடு, ஞான அறிவு, இறைவாக்கு, போதனை இவற்றில் ஒன்றையேனும் எடுத்துச் சொல்லாமல் பரவசப்பேச்சு மட்டும் பேசினால், உங்களுக்குப் பயன் என்ன?
7 குழல் அல்லது யாழ் போன்ற உயிரற்ற இசைக்கருவிகளை எடுத்துக் கொள்வோம் அவை வேறுபட்ட ஓசையை எழுப்பாவிடில், குழலோசையையும் யாழிசையும் அறிவதெப்படி?
8 அவ்வாறே, எக்காளம் தெளிவாக முழங்காவிடில், போர் முனைக்கு எவன் ஆயத்தப்படுத்திக் கொள்வான்?
9 அவ்வாறே நீங்களும் பரவசப் பேச்சுப் பேசும்போது தெளிவாகப் பேசாவிட்டால், நீங்கள் சொல்வது விளங்குவதெப்படி? உங்கள் பேச்சு காற்றோடு போய் விடும்.
10 உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருக்கலாம்; அவற்றுள் பொருள் தராதது ஒன்றேனுமில்லை.
11 பேச்சொலியின் பொருள் எனக்கு விளங்காது இருந்தால், பேசுகிறவனுக்கு நான் அந்நியனாயிருப்பான்.
12 ஆதலால் ஆவிக்குரிய வரங்களை ஆர்வமாய்த் தேடும் நீங்கள் திருச்சபைக்கு ஞான வளர்ச்சி தரும் வரங்களில் மேன்மையடைய முயலுங்கள்.
13 எனவே, பரவசப் பேச்சுப் பேசுபவன் விளக்கம் கூறும் திறனைப்பெறச் செபிக்க வேண்டும்.
14 ஏனெனில், நான் பரவசப் பேச்சில் செபம் செய்தால், என் ஆவி எனக்குள் செபம் செய்யும், என் மனமோ பயன் பெறாது.
15 அப்படியானால் செய்யவேண்டியதென்ன? ஆவியாலும் செபிக்கவேண்டும், மனத்தாலும் செபிக்க வேண்டும். ஆவியாலும் புகழ்பாட வேண்டும், மனத்தாலும் புகழ் பாடவேண்டும்.
16 இல்லையேல், நீ ஆவியால் இறைபுகழ் கூறும்போது, சபையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் உனது நன்றிச் செபத்திற்கு எவ்வாறு ' ஆமென் ' எனச் சொல்லுவார்கள்? நீ பேசுவது அவர்களுக்குப் புரியவில்லையே!
17 நீ நன்றாகத் தான் நன்றி கூறுகிறாய்; ஆனாலும் மற்றவனுக்கு அதனால் ஞான வளர்ச்சி இல்லையே!
18 கடவுள் அருளால் உங்கள் அனைவரையும்விட மேலாக நான் பரவசப் பேச்சுப் பேசுகிறேன்.
19 ஆனாலும் நான் சபையிலே பேசினால் பரவசப் பேச்சில் பத்தாயிரம் சொற்கள் பேசுவதைவிட , மற்றவர்களுக்குக் கற்பிக்க அறிவுத் தெளிவோடு நாலைந்து சொல் மட்டுமே பேசுவதை விரும்புவேன்
20 சகோதரர்களே, அறிவுத் திறனில் குழந்தைகளாய் இராதீர்கள்; தீமையிலே குழந்தைகளாயும், அறிவுத் திறனில் முதிர்ந்தவர்களாயும் இருங்கள்.
21 ' வேற்று மொழியினர் வாயிலாகவும் வேற்றினத்தார் வாய்ச்சொல்லாலும் இந்த மக்களிடம் பேசுவேன். அப்பொழுதும் அவர்கள் எனக்குச் செவி கொடுக்க மாட்டார்கள் என்கிறார் ஆண்டவர் ' என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
22 ஆகவே பரவசப் பேச்சு விசுவாசிகளுக்கன்று, அவிசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது. இறைவாக்கோ அவிசுவாசிகளுக்கன்று, விசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது.
23 அப்படியிருக்க, முழுச்சபையும் ஒன்றாகக் கூடும்பொழுது, எல்லாரும் பரவசப் பேச்சுப் பேசினால், அங்கே வரும் பொதுமக்களோ அவிசுவாசிகளோ உங்களைப் பைத்தியக்காரர் என்று சொல்ல மாட்டார்களா?
24 ஆனால் எல்லாரும் இறைவாக்கு உரைக்கும்போது, அவிசுவாசியோ, பொதுமக்களுள் ஒருவனோ அங்கே வந்தால், அனைவரும் கூறுவது, அவனுடைய மனச்சாட்சியின் நிலையை எடுத்துக்காட்டி, அவனைத் தீர்ப்புக்கு உட்படுத்துகிறது.
25 அவனது உள்ளத்தில் மறைந்திருப்பது வெளிப்படும். அப்பொழுது அவன் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுது, ' உண்மையாகவே கடவுள் உங்களிடையில் உள்ளார் ' என அறிக்கையிடுவான்.
26 அப்படியானால், சகோதரர்களே, என்ன முடிவு செய்வது? நீங்கள் கூடிவரும்பொழுது. உங்களுள் ஒருவன் புகழ் பாடுவதாகவோ, போதனை செய்வதாகவோ, திருவெளிப்பாடு உரைப்பதாகவோ, பரவசப் பேச்சுப் பேசுவதாகவோ, விளக்கம் கூறுவதாகவோ இருந்தால், எல்லாம் ஞானவளர்ச்சி தர நடை பெறட்டும்.
27 பரவசப் பேச்சுப் பேசுவதாயிருந்தால், இருவர் பேசலாம்; மிஞ்சினால் மூவர் பேசலாம். ஆயினும் ஒருவர் பின் ஒருவராகப் பேசவேண்டும்; ஒருவன் விளக்கம் கூறட்டும்.
28 விளக்கம் கூறுபவன் இல்லாவிட்டால், அவர்கள் சபையில் பேசாதிருக்கட்டும்; தனக்குள் கடவுளோடு உரையாடட்டும்.
29 இறை வாக்கினரோ இருவர் அல்லது மூவர் பேசலாம்; மற்றவர்கள் அவர்கள் பேசுவதைத் தேர்ந்து தெளியட்டும்.
30 சபையில் அமைந்திருக்கும் ஒருவனுக்குத் திருவெளிப்பாடு அருளப்பட்டால் முன்னர் பேசிக்கொண்டிருந்தவன் நிறுத்திக்கொள்ளட்டும்.
31 நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்குரைக்கலாம்; அப்போதுதான் எல்லாரும் கற்றுக் கொள்ளவும், ஊக்கம் பெறவும் இயலும்.
32 இறைவாக்கினர் தாங்கள் பெற்ற ஏவுதலை அடக்கிக் கொள்ள முடியும்.
33 ஏனெனில் கடவுள் குழப்பத்தின் கடவுளல்லர், அமைதியின் கடவுளே. இறை மக்களின் எல்லாச் சபைகளிலும் நடப்பதுபோல், சபையில் பெண்கள் பேசாதிருக்க வேண்டும்..
34 பேச அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்க வேண்டும். திருச்சட்டமும் அவ்வாறே கூறுகிறது.
35 அவர்கள் ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால் வீட்டிலே தங்கள் கணவரைக் கேட்டுக்கொள்ளட்டும். ஏனெனில் சபையில் பேசுவது பெண்களுக்கு அழகன்று.
36 கடவுளின் வாக்கு உங்களிடமிருந்தா வெளிப்பட்டது?
37 உங்களிடம் மட்டுமா வந்தது? ஒருவன் தான் இறைவாக்கினன் என்றோ, ஆவியின் ஏவுதல் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது ஆண்டவருடைய கட்டளை என அவன் ஒத்துக்கொள்வானாக.
38 இதை எவனாவது ஏற்காவிடில், நீங்களும் அவனை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
39 ஆகையால் சகோதரர்களே, இறைவாக்குரைப்பதையே ஆர்வமாய்த் தேடுங்கள்; பரவசப் பேச்சுப் பேசுவதையும் தடுக்காதீர்கள்.
40 ஆனால் எல்லாம் பாங்கான முறையில் ஒழுங்காக நடைபெறவேண்டும்.

1-Corinthians 14:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×