Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 139 Verses

1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, [QBR] அறிந்திருக்கிறீர். [QBR]
2 என்னுடைய உட்காருதலையும் [QBR] என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; [QBR] என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். [QBR]
3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; [QBR] என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். [QBR]
4 என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, [QBR] இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். [QBR]
5 முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, [QBR] உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். [QBR]
6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், [QBR] எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. [QBR]
7 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? [QBR] உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? [QBR]
8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; [QBR] நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். [QBR]
9 நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, [QBR] கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,
10 அங்கேயும் உமது கை என்னை நடத்தும், [QBR] உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். [QBR]
11 இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். [QBR]
12 உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; [QBR] இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; [QBR] உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. [QBR]
13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; [QBR] என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; [QBR] உமது செயல்கள் அதிசயமானவைகள்; [QBR] அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும். [QBR]
15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, [QBR] பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, [QBR] என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை. [QBR]
16 என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; [QBR] என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், [QBR] அவைகள் உருவேற்படும் நாட்களும், [QBR] உமது புத்தகத்தில் எழுதியிருந்தது. [QBR]
17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; [QBR] அவைகளின் அளவு எவ்வளவு அதிகம். [QBR]
18 அவைகளை நான் எண்ணப்போனால், [QBR] மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன். [QBR]
19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; [QBR] இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள். [QBR]
20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; [QBR] உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள். [QBR]
21 யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், [QBR] உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை [QBR] அருவருக்காமலும் இருப்பேனோ? [QBR]
22 முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; [QBR] அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன். [QBR]
23 தேவனே, என்னை ஆராய்ந்து, [QBR] என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; [QBR] என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும். [QBR]
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, [QBR] நித்திய வழியிலே என்னை நடத்தும். [PE]
×

Alert

×