1
|
கன்னிப்பெண் எவளையும் நோக்காதிருக்க என் கண்களோடு நான் ஒப்பந்தம் செய்திருக்கிறேன். |
2
|
உன்னதத்திலிருக்கும் கடவுளிடமிருந்து எனக்கு என்ன பங்கு கிடைக்கும்? விண்ணிலிருந்து எல்லாம் வல்லவர் என் உரிமைச் சொத்தாய் எதைத் தருவார்? |
3
|
நேர்மையற்றவர்களுக்கு இடுக்கண் அன்றோ விளைகிறது? அக்கிரமம் செய்வோருக்கு அழிவன்றோ நேருகிறது? |
4
|
என் வழிகளை அவர் பார்க்கிறார் அல்லவா? என் காலடிகளை எல்லாம் கணக்கிடுகின்றாரன்றோ? |
5
|
பொய்ம்மை நெறியில் நான் நடந்திருந்தால், வஞ்சகம் செய்ய என் கால் விரைந்திருந்தால், |
6
|
சமன் செய்து சீர்தூக்கும் கோலில் நான் நிறுக்கப்படுக! அப்போது கடவுள் என் மாசின்மையை அறிவார். |
7
|
நெறியினின்று என் கால் பிறழ்ந்திருந்தால், என் கண்களைப் பின்பற்றி என் உள்ளம் சென்றிருந்தால், என் கைகளில் ஏதேனும் மாசு ஏற்பட்டிருந்தால், |
8
|
நான் விதைப்பதை இன்னொருவன் உண்டு போகட்டும், எனக்கென்று வளர்வது வேரோடு பிடுங்கப்படட்டும்! |
9
|
பிறன் மனைவியைக் கண்டு என்னுள்ளம் மயங்கியிருந்தால், அயலான் வீட்டு வாயிலில் நான் காத்துக் கிடந்திருந்தால், |
10
|
பிறனொருவனுக்கு என் மனைவி மாவரைக்கட்டும், மற்றவர்கள் அவள் தோளை முயங்கட்டும். |
11
|
ஏனெனில் அது பழிச்செயலாகவும், தண்டனைக்குரிய அக்கிரமமாயும் இருந்திருக்கும்; |
12
|
கீழுலகம் வரை சுட்டெரிக்கும் தீயாய் இருந்து, என் விளைச்சல்களையெல்லாம் அது வேரோடு எரித்திருக்கும். |
13
|
என் வேலைக்காரனோ வேலைக்காரியோ என் மேல் வழக்குத் தொடுத்து, அவ்வழக்கை நான் அசட்டை செய்து தள்ளியிருந்தால், |
14
|
கடவுள் தீர்ப்பிட எழுந்து வரும் போது நான் என்ன செய்வேன்? அவர் விசாரணை நடத்தும் போது என்ன பதில் கொடுப்பேன்? |
15
|
என்னைத் தாய் வயிற்றில் உண்டாக்கியவர் தானே அவனையும் உண்டாக்கினார்? தாய் வயிற்றில் எங்களை உருவாக்கியவர் ஒருவரே அன்றோ? |
16
|
ஏழைகள் விரும்பிக் கேட்டதை நான் தராமாற் போயிருந்தால், கைம்பெண்ணின் கண்கள் மங்கிப் போகச் செய்திருந்தால், |
17
|
திக்கற்றவனுக்கு உணவில் பங்கு தராமல், நான் மட்டும் தனியாய் அதை உண்டிருந்தால், |
18
|
(ஏனெனில் சிறுவயது முதல் அவனுக்குத் தந்தையாயிருந்து வளர்த்தேன், தாய் வயிற்றிலிருந்தே அவனை நடத்தி வந்தேன்), |
19
|
ஆடையின்றி எவனாவது அழிவதை நான் கண்டிருந்தால், ஏழையொருவன் போர்வையின்றி இருப்பதைப் பார்த்திருந்தால், |
20
|
ஆடையுடுத்தப் பெற்ற அவன் இடை என்னை வாழ்த்தாதிருந்தால், எனது ஆட்டு மயிராடையால் அவன் குளிர் போக்கப்படாதிருந்தால், |
21
|
ஊர்ச்சபையில் எனக்குச் செல்வாக்கு உண்டெனக் கண்டு, திக்கற்றவர்களுக்கெதிராய் நான் கையோங்கியிருந்தால், |
22
|
என் தோள்பட்டை தோளிலிருந்து விழுந்து போகட்டும், மூட்டினின்று என் கை முறிந்து போகட்டும். |
23
|
ஏனெனில் கடவுள் அனுப்பும் வேதனைக்காக அஞ்சி நடுங்கினேன், அவரது மகிமையின் முன் என்னால் நிற்கவே முடியவில்லையே. |
24
|
பொன்னில் என்னுடைய நம்பிக்கையை வைத்திருந்தால், தங்கம் என் உறுதுணை என்று நம்பியிருந்தால், |
25
|
எனக்குச் செல்வம் மிகுதியாய் இருந்ததாலும், என் கை மிகுதியாய்ச் சேர்த்ததாலும் நான் மகிழ்ந்திருந்தால், |
26
|
ஒளி வீசும் கதிரவனைக் கண்ணால் நோக்கி, சுடர் நடுவில் அசையும் நிலவைப் பார்த்து, |
27
|
என் உள்ளம் மறைவிலே மயங்கியிருந்தால், என் வாய் என் கையை முத்தமிட்டிருந்தால், |
28
|
இதுவும் தண்டனைக்குரிய அக்கிரமமாய் இருந்திருக்கும்; ஏனெனில் அது உன்னத கடவுளை நான் மறுதலித்ததாகும். |
29
|
என்னைப் பகைத்தவனின் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்ததுண்டோ? தீமை அவனைத் தாவிப் பிடித்த போது நான் அக்களித்தேனா? |
30
|
சாபனையால் அவன் உயிரை வாங்கும்படி கேட்டு, என் வாய் பாவம் செய்ய நான் விடவேயில்லை; |
31
|
அவன் தரும் புலாலுணவைப் புசியாதவன் உண்டோ?' என்று என் கூடாரத்தில் இருந்தவர்கள் சொல்லாதிருந்தார்களோ? |
32
|
வெளி ஊரான் எவனுமே வீதியில் தங்கியதில்லை, வழிப்போக்கனுக்கு என் கதவுகளைக் திறந்துவிட்டேன்; |
33
|
என் அக்கிரமத்தை என் உள்ளத்திலேயே ஒளித்து வைத்து, என் மீறுதல்களை மனிதரிடமிருந்து நான் மறைத்ததுண்டோ? |
34
|
மக்கள் கூட்டத்திற்கு மிகவும் அஞ்சி, சொந்த இனத்தாரின் இகழ்ச்சிக்கு அஞ்சி மவுனமாயிருந்ததுண்டோ? அல்லது வீட்டுக்குள்ளேயே இருந்ததுண்டோ? |
35
|
ஐயோ! என் வழக்கை யாரேனும் கேட்கும் வரம் எனக்குக் கிடைக்காதா? இதோ இருக்கிறது என் கையொப்பம், எல்லாம் வல்லவர் எனக்கு மறுமொழி கூறட்டும்! என் எதிராளி எனக்கெதிராய்க் கொண்டுள்ள வழக்கை எழுதி என் கையில் கொடுத்தால் நலமாயிருக்குமே! |
36
|
அதனை என் தோள் மீது சுமந்து செல்வேன், மணி முடியாக என் மேல் சுற்றிக் கட்டிக் கொள்வேன். |
37
|
என் நெறிகளை ஒவ்வொன்றாய் எடுத்துரைப்பேன், ஓர் இளவரசனைப் போல் நான் அவனை அணுகிடுவேன். |
38
|
எனது நிலம் எனக்கெதிராய்க் கூக்குரலிட்டு அதன் படைசால்கள் ஒன்று கூடி அழுதிருந்தால், |
39
|
கூலி கொடாமல் அதன் விளைவை நான் உண்டிருந்தால், அதன் உரிமையாளர்களின் சாவுக்கு நான் சதி செய்திருந்தால், |
40
|
கோதுமைக்குப் பதிலாக முட்கள் வளரட்டும், வாற் கோதுமைக்குப் பதிலாக வேண்டாத களைகள் முளைக்கட்டும்". இத்துடன் யோபுவின் வார்த்தைகள் முடிவுற்றன. |
Job 31:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...