2
|
காயினான், மலலெயேல், யாரேத்; |
3
|
ஏனோக், மத்துசலா, லாமேக்; |
4
|
நோவா, சேம், காம், யாப்பேத். |
5
|
யாப்பேத்தின் புதல்வர்கள்: கோமேர், மாகோக், மாதாய், யாவான், துபால், மொசோக், தீராஸ் ஆகியோராவர். |
6
|
கோமேரின் புதல்வர்கள்: அசெனெஸ், ரிப்பாத், தொகோர்மா ஆகியோராவர். |
7
|
யாவானின் புதல்வர்கள்: எலிசா, தார்சீஸ், சேத்திம், தொதானிம் ஆகியோராவர். |
8
|
காமுடைய புதல்வர்கள்: கூஸ், மெசுராயிம், புத், கானான் ஆகியோராவர். |
9
|
கூசுவினுடைய புதல்வர்கள்: சாபா, எவிலா, சபதா, ரெக்மா, சபதகா ஆகியோராவர். ரெக்மாவின் புதல்வர்களுக்கு, சாபா, தாதான் என்று பெயர். |
10
|
கூஸ் நெம்ரோதையும் பெற்றார். இவர் பூமியிலே ஆற்றலில் சிறந்து விளங்கினார். |
11
|
மெசுராயிமின் சந்ததியில் லூதிம், அனாமிம், லாவாபிம், நெப்துயிம், பெத்ரூசிம், |
12
|
கஸ்லுயிம் (இவர்களிடமிருந்தே பிலிஸ்தியர் தோன்றினர்), கப்தோரிம் ஆகியோர் தோன்றினர். |
13
|
கானான் என்பவர் தலைமகனாய் சிதோனையும், பின்பு ஏத்தையும் பெற்றார். |
14
|
மேலும், யெபுசெயரும், அமோறையரும், கெர்சேயரும் |
15
|
ஏவையரும் அராசேயரும், சீனாயரும், அரதியரும், |
16
|
சமாரியரும், அமத்தையரும் அவருடைய வழித்தோன்றல்களே. |
17
|
சேமின் சந்ததியில் எலாம், அஸ்சூர், அற்பக்சாத், நூத், ஆராம், ஊஸ், ஊல், கெதேர், மொசோக் ஆகியோர் பிறந்தனர். |
18
|
அற்பக்சாத் சாலேயைப் பெற்றார்; சாலே எபேரைப் பெற்றார். |
19
|
எபேருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். ஒருவர் பாலேக் என்று அழைக்கப்பட்டார் (ஏனெனில், இவரது காலத்தில் தான் நாடு பகுக்கப்பட்டது); |
20
|
அவர் சகோதரரின் பெயர் யெக்தான். இவர் எல்மோதாத், சாலேப், ஆசர்மோத், யாரே ஆகியோருக்குத் தந்தை ஆனார். |
21
|
மேலும், அதோராம், ஊசால், தெக்ளா, |
22
|
ஏபால், அபிமாயேல், சாபா, ஒப்பீர், ஏவிலா, |
23
|
யோபாப் ஆகியோர் அனைவரும் யெக்தான் வழி வந்தவர்கள். |
24
|
சேமின் குலத்தில் அற்பக்சாத், சாலே, |
26
|
ராகாவு, சேருக், நாக்கோர், தாரே, |
27
|
ஆபிரகாம் எனப்பட்ட ஆபிராம் ஆகியோர் தோன்றினர். |
28
|
ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயேல் என்ற இரு புதல்வரைப் பெற்றார். |
29
|
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மாயேலின் மூத்த மகன் பெயர் நபயோத்; அவருக்குப் பின் கேதார், அத்பியேல், |
30
|
மப்சாம், மஸ்மா, தூமா, மஸ்சா, ஆதாத், தேமா, |
31
|
யெதூர், நாபீஸ், கெத்மா ஆகியோர் பிறந்தனர். |
32
|
சமிரான், யெக்சான், மதான், மதியான், யெஸ்பொக், சூயே ஆகியோர் ஆபிரகாமுக்கு அவர் வைப்பாட்டி கெத்தூராளிடம் பிறந்தனர். யெக்சானின் புதல்வர் சாபா, தாதான் ஆகியோராவர். தாதானின் புதல்வர் அஸ்சூரிம், லத்தூசிம், லவோமிம், ஆகியோராவர்; |
33
|
மதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், ஏனோக், அபிதா, எல்தா ஆகியோராவர். இவர்கள் எல்லாரும் கெத்தூராளுக்குப் பிறந்தவர்கள். |
34
|
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கு எசாயுவையும் இஸ்ராயேலையும் பெற்றார். |
35
|
எசாயுவுக்கு எலீப்பாஸ், ரகுயேல், ஏகூஸ், இகலோம், கோரே ஆகியோர் பிறந்தனர். |
36
|
எலீப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், செப்பி, காதான், கேனேஸ், தம்னா, அமலேக் என்பவர்கள். |
37
|
ரகுயேலுடைய புதல்வர்: நகாத், சாரா, சம்மா, மேசா என்பவர்கள். |
38
|
செயீருக்கு லோத்தான், சோபால், செபெயோன், அனா, திசோன், எசேர், திசான் ஆகியோர் பிறந்தனர். |
39
|
லோத்தான் ஓரியையும் ஒமாமையும் பெற்றார். லோத்தானுடைய சகோதரியின் பெயர் தம்னா. |
40
|
அலியான், மனகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோருக்குச் சோபால் தந்தையானார். செபயோனின் புதல்வர் அயியா, அனா என்று அழைக்கப்பட்டனர். அனாவின் மகன் பெயர் திசோன். |
41
|
திசோனின் புதல்வர்: அம்ராம், எசெபான், யெதிரான், காரான் என்பவர்கள். |
42
|
எசேரின் புதல்வர்: பலான், சாவன், யக்கான் என்பவர்கள். திசானுக்கு ஊஸ், அரான் என்ற புதல்வர் பிறந்தனர். |
43
|
இஸ்ராயேல் புதல்வரை ஆள அரசர் தோன்று முன்பு, ஏதோம் நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் வருமாறு: பெயோரின் மகன் பாலே தெனபாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். |
44
|
பாலே இறந்த பின் பொஸ்ரா என்ற ஊரைச் சார்ந்த ஜாரேயின் மகன் யோபாப் அரியணை ஏறினார். |
45
|
யோபாப் இறந்த பின் தெமானியரின் நாட்டில் பிறந்த உசாம் அரசரானார். |
46
|
உசாம் இறந்த பின்பு பதாதின் மகன் ஆதாத் அரியணை ஏறினார். இவர் மோவாப் நாட்டிலே மதியானியரை முறியடித்தார். இவரது தலை நகரின் பெயர் ஆவித். |
47
|
ஆதாத் உயிர் நீத்த பின் மஸ்ரெக்காவைச் சார்ந்த செம்லா அரசரானார். |
48
|
செமலா மாண்டபிறகு ஆற்றோரத்தில் அமைந்திருக்கும் ரொகொபோத்தில் வாழ்ந்து வந்த சவுல் ஆட்சி செலுத்தினார். |
49
|
சவுல் மரித்த பின் அக்கோபோரின் மகன் பலனான் அரியணை ஏறினார். பலனானும் மாண்டார். |
50
|
இவருக்குப் பின் ஆதாத் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவரது தலைநகரின் பெயர் பாவு. இவருடைய மனைவி பெயர் மெக்தாபேல். இவள் மெசாப் என்பவளின் மகள், மாத்தேத்தின் புதல்வி. |
51
|
ஆதாத் இறந்தபின், அரசர்களுக்குப் பதிலாக ஏதோமில் மக்கள் தலைவர்கள் தோன்றினர். |
52
|
தம்னா, அல்வா, எத்தேத், ஒலிபாமா, ஏலா |
53
|
பினோன், கேனேஸ், தேமான், மப்சார், |
54
|
மத்தியேல், ஈராம் ஆகியோரே அத்தலைவர்கள். |
1-Chronicles 1:24 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...