1
|
{ஆதாமின் வம்சவரலாறு} (1 நாளா 1:1-4) [PS] ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார். |
2
|
அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார். |
3
|
ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். |
4
|
ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
5
|
ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான். [PE][PS] |
6
|
சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். |
7
|
சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
8
|
சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான். |
9
|
ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். |
10
|
ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
11
|
ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். |
12
|
கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் [* தேவனுக்கு ஸ்தோத்திரம்] பெற்றெடுத்தான். |
13
|
கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
14
|
கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான். |
15
|
மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். |
16
|
மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். |
17
|
மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான். |
18
|
யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். |
19
|
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
20
|
யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான். |
21
|
ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். |
22
|
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். |
23
|
ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள். |
24
|
ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். |
25
|
மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான். |
26
|
மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
27
|
மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான். |
28
|
லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து, |
29
|
“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். |
30
|
லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். |
31
|
லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான். [PE][PS] |
32
|
நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான். [PE] |
Genesis 5:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...