Indian Language Bible Word Collections
Job 8:17
Job Chapters
Job 8 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 8 Verses
1
|
அப்போது சூகியனான பில்தாத் பதிலாக, |
2
|
"எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்? பலத்த காற்றைப்போன்று உமது சொற்கள் வெளிப்படுகின்றன. |
3
|
தேவன் நியாயத்தை மாற்றுவாரோ? சர்வ வல்லமையுள்ள தேவன் சரியானவற்றை மாற்றுவாரோ? |
4
|
உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தண்டனைப் பெற்றார்கள். |
5
|
ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும். |
6
|
நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால், அவர் விரைந்து உமக்கு உதவ வருவார். உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார். |
7
|
தொடக்கம் அற்பமாக இருந்தாலும் உமது எதிர் காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும். |
8
|
"வயது முதிர்ந்தோரைக் கேளும், அவர்கள் முற்பிதாக்கள் அறிந்துகொண்டதைத் தெரிந்துகொள்ளும். |
9
|
ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம். ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை. |
10
|
முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும். அவர்கள் அறிந்துக்கொண்டவற்றை உமக்குச் சொல்லக் கூடும்" என்று கூறினான். |
11
|
பில்தாத் மேலும், "பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ? தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ? |
12
|
இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும். அவற்றை வெட்டிப் பயன்படுத்த முடியாதபடி சிறியனவாக இருக்கும். |
13
|
தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள். தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும். |
14
|
அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை. அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது. |
15
|
சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும். அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது. |
16
|
அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான். தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும். |
17
|
பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும். பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும். |
18
|
ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும், அது அங்கிருந்தது என்பதையும் ஒருவரும் அறியமாட்டார்கள். |
19
|
ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது. அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது. |
20
|
தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார். அவர் கொடியோருக்கு உதவமாட்டார். |
21
|
தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும் உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார். |
22
|
ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள். தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்" என்றான். |