1
|
அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக, |
2
|
"யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய். வெப்பமான காற்று நிரம்பியவனாக ஞானவான் இருக்கமாட்டான. |
3
|
பொருளற்ற பேச்சுக்களாலும் தகுதியற்ற வார்த்தைகளாலும் ஒரு ஞானவான் விவாதிப்பானென்று நீ நினைக்கிறாயா? |
4
|
யோபுவே, நீ கூறும்படி நடந்தால், ஒருவனும் தேவனை மதித்து, அவரிடம் ஜெபிக்கமாட்டான். |
5
|
நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. யோபுவே, உனது புத்திசாலித்தனமான சொற்களால் உனது பாவங்களை நீ மறைக்க முயன்றுக்கொண்டிருக்கிறாய். |
6
|
நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை. உனது வாயினால் கூறும் சொற்களே உனது தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன. உனது சொந்த உதடுகளே உனக்கு எதிராகப் பேசுகின்றன. |
7
|
"யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா? மலைகள் தோன்றும் முன்னே நீ பிறந்தாயா? |
8
|
நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா? நீ மட்டுமே ஞானமுள்ளவனென நினைக்கிறாயா? |
9
|
யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம். உனக்குப் புரிகின்றக் காரியங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். |
10
|
நரைமயிருள்ளோரும் வயது முதிர்ந்தோரும் எங்களோடு ஒத்திருக்கிறார்கள். ஆம், உனது தந்தையைக் காட்டிலும் வயது முதிர்ந்தோரும் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். |
11
|
தேவன் உனக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார், ஆனால் அது உனக்குப் போதவில்லை. தேவனுடைய செய்தியை நயமாக நாங்கள் உனக்குக் கூறினோம். |
12
|
யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை? ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை? |
13
|
நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய். |
14
|
"ஒரு மனிதன் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது. பெண் வயிற்றில் பிறந்த ஒருவன் நியாயமுள்ளவனாக இருக்க முடியாது. |
15
|
தேவன் அவரது தூதர்களைக்கூட நம்புகிறதில்லை. வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல. |
16
|
மனிதன் இன்னும் கேவலமானவன், மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான். |
17
|
"யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன். எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன். |
18
|
ஞானவான்கள் எனக்குக் கூறியவற்றை நான் உனக்குச் சொல்வேன். ஞானவான்களின் முற்பிதாக்கள் அவர்களுக்கு இவற்றைக் கூறினார்கள். அவர்கள் எந்த இரகசியங்களையும் என்னிடமிருந்து மறைக்கவில்லை. |
19
|
அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள். கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை. எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை. |
20
|
தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான். கொடியவன் வரையறுக்கப்பட்ட அவன் ஆயுள் முழுவதும் துன்புறுகிறான். |
21
|
ஒவ்வொரு சத்தமும் அவனை அச்சுறுத்துகிறது, அவன் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது அவனது பகைவன் அவனைத் தாக்குவான். |
22
|
தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான், மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது. |
23
|
அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான், ஆனால் அவன் உடல் பருந்துகளுக்கு இரையாகும். அவனது மரணம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அவன் அறிகிறான். |
24
|
கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும். அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும். |
25
|
ஏனெனில், தீயவன் தேவனுக்குக் கீழ்ப்படியமறுக்கிறான். அவன் தனது கை முட்டியைத் தேவனுக்கு எதிராக உயர்த்தி, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிராகச் செயல்படுகின்றான். தோற்கடிக்க முயல்கிறான். |
26
|
தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன். அவன் கெட்டியான, வலிமையான கேடயத்தால் தேவனைத் தாக்க முயல்கிறான். |
27
|
"அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான், |
28
|
ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும், அவன் வீடு வெறுமையாகும், |
29
|
தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான். அவன் செல்வம் நிலைக்காது. அவனது பயிர்கள் செழிப்பாக வளராது. |
30
|
தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான். நோயினால் மடியும் இலைகளையும் காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான். |
31
|
தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான். |
32
|
அவன் வாழ்க்கை முடியும் முன்பே, தீயவன் வயதாகி வாடிப்போவான். என்றும் பசுமையுற முடியாத, உலர்ந்த கிளையைப் போல அவன் இருப்பான். |
33
|
இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான். மொட்டுக்களை இழக்கும் ஒலிவ மரத்தைப் போன்று அம்மனிதன் இருப்பான். |
34
|
ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை). பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும். |
35
|
தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள். ஜனங்களை ஏமாற்றும் வழிகளை அவர்கள் எப்போதும் திட்டமிடுகிறார்கள்" என்று கூறினான். |
Job 15:21 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...