Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Romans Chapters

Romans 7 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Romans Chapters

Romans 7 Verses

1 சகோதரர்களே, உயிரோடு இருக்கும் வரையில்தான் ஒருவன்மேல் சட்டத்திற்கு அதிகாரம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா? சட்டம் தெரிந்தவர்களைக் கேட்கிறேன்.
2 எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருத்தி, கணவன் உயிரோடு இருக்கும் வரையில் தான் திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். கணவன் இறந்துவிட்டால் அந்தச் சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறாள்.
3 ஆகையால், கணவன் உயிரோடிருக்கும்போதே அவள் வேறொருவனோடு வாழ்ந்தால், அவளுக்கு விபசாரி என்ற பெயர் கிடைக்கும்; ஆனால், கணவன் இறந்து போனால், அவள் திருமணச் சட்டத்தினின்று விடுதலைபெற்றவள் ஆகிறாள், ஆகவே அவள் வேறொருவனுக்கு மனைவியானால், விபசாரி அல்லள்.
4 அவ்வாறே, என் சகோதரர்களே, நீங்களே கிறிஸ்துவின் உடலோடு ஒன்றித்திருப்பதால் சட்டத்தைப் பொருத்தமட்டில் இறந்தவர்கள் ஆனீர்கள்; அதன் விளைவாக, வேறொருவரோடு பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தவர். நாம் கடவுளுக்கேற்ற பயன்தர வேண்டுமென்றே அவர் உயிர்த்தெழுந்தார்.
5 நாம் ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, பாவ இச்சைகள் சட்டத்தின் வழியாய்க் கிளர்ந்து எழும்பி, நம்முடைய உறுப்புகளில் சாவுக்கேற்ற பயன் தரும்படியாகச் செயலாற்றின.
6 இப்பொழுதோ நாம் கட்டுண்டிருந்த சட்டத்தைப் பொருத்தமட்டில் இறந்து, அதனின்று விடுதலை பெற்றோம். ஆகையால், எழுதிய சட்டத்திற்குரிய பழைய நெறியில் இனி ஊழியம் செய்வதை விட்டு ஆவியானவருக்குரிய புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிந்தது.
7 அப்படியானால், நாம் என்ன சொல்வது? சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருகாலும் இல்லை. ஆயினும், சட்டம் இல்லாதிருந்தால் நான் பாவத்தை அறிந்திருக்க மாட்டேன். ஏனெனில், 'இச்சியாதே' எனச் சட்டம் சொல்லாமற்போயிருந்தால், இச்சை என்பது என்ன என்றே நான் அறிந்திருக்கமாட்டேன்.
8 ஆனால், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாவம் என்னில் எல்லாவகை இச்சைகளையும் தூண்டிற்று. ஏனெனில், சட்டம் இல்லாவிடிலும் பாவம் செத்துக்கிடக்கிறது.
9 ஒரு காலத்தில் சட்டம் இல்லாதபோது நான் உயிர் உள்ளவனாயிருந்தேன். கட்டளை வந்தபோது பாவம் உயிர்பெற்றது; நானோ உயிரிழந்தேன்.
10 வாழ்வுக்கு வழியாய் இருக்க வேண்டிய கட்டளை, சாவுக்கு வழியாயிற்று எனக் கண்டேன்.
11 ஏனெனில், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாவம் என்னை வஞ்சித்து அந்தக் கட்டளை வழியாக என்னைக் கொன்றது.
12 சட்டம் தன்னிலேயே பரிசுத்தமானது தான்; அவ்வாறே கட்டளையும் பரிசுத்தமானது, நீதியானது, நன்மை மிக்கது.
13 அவ்வாறாயின், நன்மை மிக்கதான ஒன்று, எனக்குச் சாவாக மாறிற்றா? ஒருகாலும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்; பாவம் தன் இயல்பைக் காட்டுவதற்காக நல்லதாகிய ஒன்றைக்கொண்டு எனக்குச் சாவை விளைவித்தது; இவ்வாறு, பாவம் கட்டளையின் வழியாகத் தன் கொடிய இயல்பை அளவு கடந்த முறையில் காட்டுவதாயிற்று.
14 சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; நானோ பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்: சீரழிந்த இயல்புள்ளவன்.
15 ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ, அதையே செய்கிறேன்.
16 எனக்கு விருப்பம் இல்லாததையே நான் செய்தால், சட்டம் நல்லது என ஏற்றுக் கொள்கிறேன்.
17 ஆனால், அவ்வாறெல்லாம் செயல்புரிபவன் நானல்லேன்; என்னுள் குடிகொண்டிருக்கும் பாவம்தான் செயல்புரிகிறது.
18 ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் இயல்பில், நன்மை எதுவும் குடி கொண்டில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை. அதைச் செய்யத்தான் முடியவில்லை.
19 நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20 அப்படி நான் எதை விரும்பவில்லையோ அதையே செய்கிறேன் என்றால், அதைச் செய்பவன் நானல்லேன். என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே அதைச் செய்கிறது என்பது தெளிவு
21 ஆகவே, நான் நன்மை செய்ய விரும்பும்போதெல்லாம், என் கைக்கு எட்டுவது தீமைதான்; இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன்.
22 ஏனெனில், என் உள்மனத்தில் நான் கடவுளின் சட்டத்திற்கு மனமுவந்து உட்படுகிறேன்.
23 ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது. என் உறுப்புகளில் இருக்கும் பாவச் சட்டத்திற்கு என்னைச் சிறைப்படுத்துகிறது.
24 ஆழ் துயரில் மூழ்கியுள்ள மனிதன் நான்! சாவின் பிடியிலுள்ள இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
25 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு நன்றி. சுருங்கச் செல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் நானே வலுவற்ற என் இயல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் உட்பட்டிருக்கிறேன்.

Romans 7:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×