Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Judges Chapters

Judges 6 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Judges Chapters

Judges 6 Verses

1 இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தனர். அவரும் அவர்களை மதியானியர் கையில் ஏழாண்டுகள் விட்டு விட்டார்.
2 அவர்கள் இவர்களால் வெகு துன்பம் அடைந்தனர். எனவே இவர்களை எதிர்க்க மலைகளில் குகைகளைச் செய்து பாதுகாப்புள்ள இடங்களைத் தேடிக் கொண்டனர்.
3 இஸ்ராயேலர் விதைத்த பின் மதியானியரும் அமலேசித்தரும் கீழ்த்திசையின் மற்ற இனத்தாரும் அங்கு வந்து குடியேறினர்.
4 அங்கேயே தம் கூடாரங்களையடித்து காஜா வரை பயிரையெல்லாம் அழித்தனர். இஸ்ராயேலரின் வாழ்வுக்கு வேண்டிய ஆடு மாடுகள், கழுதைகள் ஆகியவற்றில் எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
5 ஏனெனில் அவர்கள் தம் கூடாரங்களோடும் மிருகங்களோடும் வந்தார்கள். அப்போது கணக்கற்ற மனிதரும் ஒட்டகங்களும் வந்திறங்கி வெட்டுக்கிளிகளைப் போல நிறைந்து தம் கைப்பட்டதெல்லாம் அழித்தனர்.
6 மதியானியருக்கு முன்பாக இஸ்ராயேலர் மிகவும் தாழ்வடைந்தனர்.
7 ஆகையால் அவர்கள் மதியானியரை எதிர்க்க ஆண்டவரை உதவி கேட்டு மன்றாடினர்.
8 அவரோ அவர்களிடம் இறைவாக்கினர் ஒருவரை அனுப்பி, "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் கூறுவதாவது: 'நாம் உங்களை எகிப்திலிருந்து வரச்செய்து அடிமை நாட்டிலிருந்து மீட்டோம்.
9 எகிப்தியர், இன்னும் உங்களை வதைத்த எல்லா எதிரிகளின் கையினின்றும் உங்களை விடுவித்தோம். நீங்கள் வந்தவுடன் அவர்களைத் துரத்தி அவர்கள் நாடுகளை உங்களுக்குக் கையளித்தோம்.
10 நாமே உங்கள் ஆண்டவராகிய கடவுள். நீங்கள் வாழும் நாட்டாரான அமோறையரின் தெய்வங்களுக்கு அஞ்ச வேண்டாம் என்று கூறியிருந்தோம். ஆயினும், நமது பேச்சை நீங்கள் கேட்கவில்லை" என்று அறிவித்தார்.
11 பிறகு ஆண்டவரின் தூதர் வந்து, எஸ்ரி குடும்பத் தலைவனான யோவாசுக்குச் சொந்தமான எபிராவிலிருந்த கருவாலி மரத்தடியில் உட்கார்ந்தார். யோவாசின் மகன் கெதெயோன் மதியானியருக்குத் தப்பியோடக் கோதுமையை அடித்துச் சேர்க்கையில்,
12 ஆண்டவரின் தூதர் அவனுக்குத் தோன்றி, "மனிதருள் மாவீரனே, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக" என்றார்.
13 கெதெயோன் அவரை நோக்கி, "ஐயனே, ஆண்டவர் எங்களோடு இருப்பாராகில் இவையெல்லாம் எங்களுக்கு நிகழ்வானேன்? ஆண்டவர் எம்மை எகிப்தினின்று மீட்டார் என்று எம் தந்தையர் கூறினதும் சொன்னதுமான மற்ற அதிசயங்கள் எங்கே? இப்போதோ ஆண்டவர் எங்களைக் கைவிட்டு விட்டார்; மதியானியருக்கு எங்களைக் கையளித்தார்" என்றான்.
14 ஆண்டவர் அவனை நோக்கி, "இதோ உறுதியுடன் நீ சென்று மதியானியர் கைகளினின்று இஸ்ராயேலை மீட்பாய்; நாமே உன்னை அனுப்பினோம் என்று அறிந்து கொள்" என்றார்.
15 ஆனால், அவன், "ஆண்டவரே நான் இஸ்ராயேலை எப்படி மீட்பேன்? மனாசே வமிசத்தில் என் குடும்பமே வலுக்குறைந்தது. நானோ என் தந்தை வீட்டில் மிகச் சிறியவன்" என்றான்.
16 அதற்கு ஆண்டவர், "நாம் உன்னோடு இருப்போம்; மதியானியார் எல்லாரையும் ஒரு மனிதனைப் போல் முறியடிப்பாய்" என்றார்.
17 அவனோ, "உமது இரக்கம் எனக்கு உண்டானால் என்னிடம் பேசுபவர் நீரே என்பதற்கு அடையாளம் காண்பியும்.
18 நான் போய், பலி கொணர்ந்து ஒப்புக்கொடுக்கும் வரை இவ்விடத்தை விட்டு அகலாதேயும்" என்றான். அவரும் மறுமொழியாக, "உன் வருகைக்காகக் காத்திருப்போம்" என்றார்.
19 கெதெயோன் போய் ஆட்டுக் குட்டியைச் சமைத்து ஒரு படிக் கோதுமை மாவில் புளியாத அப்பங்கள் செய்து, கறியை ஒரு கூடையிலும், கறிக்குழம்பை ஒரு பானையிலும் வைத்து அனைத்தையும் கருவாலி மரத்தடிக்குக் கொணர்ந்து ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தான்.
20 ஆண்டவரின் தூதர் அவனை நோக்கி, "நீ கறியையும் அப்பங்களையும் அக்கல்லின் மேல் வைத்துக் குழம்பை அவற்றின் மேல் ஊற்று" என்றார். அவன் அப்படியே செய்தான்.
21 ஆண்டவனின் தூதர் தம் கைக்கோலை நீட்டிக் கறியையும் அப்பங்களையும் தொடவே, கல்லினின்று தீ எழும்பிக் கறியையும் அப்பங்களையும் சுட்டெரித்தது. ஆண்டவரின் தூதரோ அவன் கண்களினின்று மறைந்தார்.
22 கெதெயோன், அவர் ஆண்டவரின் தூதர் தான் எனக்கொண்டு, "ஐயோ! என் ஆண்டவராகிய கடவுளே! ஆண்டவரின் தூதரை நான் நேரில் கண்டேன்" என்றான்.
23 ஆண்டவர் அவனை நோக்கி, "உனக்குச் சமாதானம் உண்டாகட்டும். அஞ்சாதே, சாகமாட்டாய்" என்றார்.
24 எனவே, கெதெயோன் அவ்விடத்திலேயே பலிபீடத்தைக் கட்டி, அதை 'ஆண்டவரின் சமாதானம்' என்று அழைத்தான். அது இன்று வரை அப்படியே வழங்கி வருகிறது.
25 அவன் எஸ்ரி வம்சத்துக்கு உரிய எபிராவில் இருக்கும் போதே, அன்றிரவு ஆண்டவர் அவனை நோக்கி, "உன் தந்தையின் எருதையும் ஏழு வயதுள்ள மற்றொரு எருதையும் பிடித்துக் கொண்டு உன் தந்தைக்குரிய பாவால் பீடத்தை உடைத்து, அதைச் சுழ்ந்துள்ள மரத்தையும் வெட்டிவிடு.
26 முன் நீ பலியிட்ட இக்கல்லின் உச்சியில் உன் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இரண்டாவது எருதைக் கொணர்ந்து, தோப்பில் நீ வெட்டும் விறகுகளை அடுக்கி, அதன் மேல் தகனப்பலியிடு" என்றார்.
27 ஆகவே, கெதெயோன் தன் ஊழியரில் பத்துப்பேரை அழைத்து, ஆண்டவர் தனக்குச் சொன்னபடி செய்தான்; ஆனால் தன் தந்தை வீட்டாருக்கும் அந்நகர மனிதருக்கும் அஞ்சிப் பகலில் ஒன்றும் செய்யாது இரவில் அதைச் செய்து முடித்தான்.
28 மறுநாள் காலையில் அந்நகர மனிதர் எழுந்த போது பாவால் பீடம் அழிந்து மரம் வெட்டப்பட்டிருக்கக் கண்டனர். அப்பொழுது கட்டப்பட்டிருந்த பீடத்தின் மேல் மற்றொரு எருது வைக்கப்பட்டிருந்தையும் கண்டனர்.
29 அப்போது, அவர்கள் ஒருவர் ஒருவரிடம், "இப்படிச் செய்தவன் யார்?" என்றார்கள். இச்செயலைச் செய்தவன் யாரென்று கேட்ட போது, யோவாசின் மகனான கெதெயோன் தான் இவற்றையெல்லாம் செய்தான் என்று சொல்லப்பட்டது.
30 அப்போது அவர்கள் யோவாசை நோக்கி, "உன் மகனை இவ்விடம் கொண்டு வா, அவன் சாகவேண்டும்; ஏனெனில் அவன் பாவால் பீடத்தை அழித்து விட்டான்; தோப்பு மரங்களையும் வெட்டிவிட்டான்" என்றனர்.
31 அதற்கு அவன், "பாவாலுக்காகச் சண்டையிட்டு அவன் பழிதீர்ப்பவர் நீங்களோ? அவனுக்கு எதிரியாய் இருப்பவன் நாளை விடியுமுன் சாகட்டும். பாவால் ஒரு தெய்வமானால், அவனே பீடத்தை அழித்தவனைப் பழி வாங்கட்டும்" என்றான்.
32 பாவாலே தன் பீடத்தை அழித்தவனைப் பழிவாங்கட்டும் என்று யோவாசு கூறினதால், அன்று முதல் கெதெயோன் ஜேரோபாவால் என்று அழைக்கப்பட்டான்.
33 ஆகவே, மதியானியரும் அமலேசித்தரும் கீழை நாட்டார் அனைவரும் ஒன்று கூடினார்கள். யோர்தான் நதியைக் கடந்து ஜெஸ்ராயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.
34 அப்போது கெதெயோன் ஆண்டவரால் ஏவப்பட்டு எக்காளம் ஊதி, அபியேசர் குடும்பம் தன்னைப் பின்பற்றிவர அழைத்தான்.
35 மனாசே வம்சத்தார் எல்லாருக்கும் தூதர்களை அனுப்ப, அவர்களும் அவனைப் பின் பற்றினார். வேறு தூதர் ஆசேர், சாபுலோன், நெப்தலியிடம் செல்லவே, அவர்களும் வந்து சேர்ந்தனர்.
36 அப்போது கெதெயோன் கடவுளை நோக்கி, "நீர் சொன்னபடி என்னைக் கொண்டு இஸ்ராயேலரை மீட்பாரானால்,
37 நான் இந்த ஆட்டு மயிரைக் களத்தில் போடுவேன்; பனி மயிரிலே மட்டும் பெய்து, பூமியெல்லாம் ஈரம் இல்லாதிருக்குமானால், நீர் சொன்னபடி இஸ்ராயேலை என் கையால், மீட்பேன் என்று அறிந்து கொள்வேன்" என்றான்.
38 அவ்வாறே நடந்தது. அவன் இரவில் எழுந்திருந்து மயிரைப் பிழிந்து ஒரு சட்டி நிறையப் பனியை நிரப்பினான்.
39 மறுபடி கெதெயோன் கடவுளை நோக்கி, "ஆட்டு மயிரைக் கொண்டு இன்னும் ஓர் அடையாளம் கேட்கத் துணிவேனேயானால், ஆண்டவரே, நீர் என்மேல் கோபம் கொள்ளாதீர்; மயிர்மட்டும் காய்ந்திருக்கவும், பூமி எங்கும் பனியால் நனைந்திருக்கவும் மன்றாடுகிறேன்" என்றான்.
40 அன்றிரவு அவன் கேட்டபடியே கடவுள் செய்தார்; ஆட்டுமயிர் காய்ந்திருக்கத் தரையில் மட்டும் பனி விழுந்திருந்தது.

Judges 6:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×