Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joel Chapters

Joel 3 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joel Chapters

Joel 3 Verses

1 இதோ, அந்நாட்களில் யூதாவையும் யெருசலேமையும் துன்ப நிலையிலிருந்து முன் போல நன்னிலைக்கு நாம் கொணரும் போது,
2 புறவினத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்து யோசப்பாத் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவோம்; நம் மக்களும் உரிமைச் சொத்துமான இஸ்ராயேலை முன்னிட்டு, அங்கே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவோம்; ஏனெனில் அவர்கள் நம் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்து, நமக்குரிய நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டனர்;
3 மேலும் நம் மக்கள்மேல் சீட்டுப்போட்டார்கள், சிறுவர்களை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள், சிறுமிகளை மதுவுக்கு விலையாய்க் கொடுத்து, வாங்கிக் குடித்தனர்.
4 தீர், சீதோன் நகரங்களே, பிலிஸ்தியா நாட்டு எல்லாப் பகுதிகளே, நம்மோடு உங்களுக்கு என்ன? நீங்கள் நம்மைப் பழிவாங்குகிறீர்களோ? அப்படி நீங்கள் பழிவாங்கினால் விரைவில் காலம் தாழ்த்தாமல், பழிக்குப் பழி உங்கள் தலை மேலேயே வாங்குவோம்.
5 நீங்கள் நம் வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக் கொண்டீர்கள், விலையுயர்ந்த பொருட்களை உங்கள் கோயில்களுக்குக் கொண்டு போனீர்கள்.
6 யூதாவின் மக்களையும் யெருசலேம் மக்களையும் கிரேக்க மக்களிடம் விலைக்கு விற்றீர்கள்; இவ்வாறு அவர்களைத் தங்கள் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் கொண்டு போகச் செய்து விட்டீர்கள்.
7 ஆனால் நீங்கள் அவர்களை விற்ற நாடுகளிலிருந்து இப்பொழுதே அவர்களைக் கிளம்பி வரச்செய்வோம்; உங்கள் கொடுமை உங்கள் தலை மேலேயே விழச்செய்வோம்.
8 உங்கள் புதல்வர் புதல்வியரை நாம் யூதாவின் மக்களிடம் விற்றுப் போடுவோம், இவர்களோ அவர்களைத் தொலை நாட்டு மக்களான சாபேர்க்கு விற்பர்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியுள்ளார்."
9 புறவினத்தார் நடுவில் இதை முழங்குங்கள்; பரிசுத்தப் போருக்குப் புறப்படுங்கள், வலிமை மிக்க வீரர்களைக் கிளப்புங்கள்; போர்த்திறம் வாய்ந்த அனைவரும் திரண்டு வரட்டும், வந்து போருக்குக் கிளம்பட்டும்.
10 கலப்பைக் கொழுவைப் போர் வாளாக அடித்துக் கொள்ளுங்கள், அரிவாள்களைக் கொண்டு ஈட்டிகள் செய்து கொள்ளுங்கள்; வலுவற்றவனும், "நானொரு போர்வீரன்" என்று சொல்லிக் கொள்ளட்டும்.
11 சுற்றுப்புறத்திலுள்ள மக்களினங்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள், வந்து அங்கே ஒன்றுகூடுங்கள். (ஆண்டவரே உம் படைகளை அனுப்பியருளும்!)
12 மக்களினங்கள் யாவும் கிளம்பி வரட்டும், வந்து யோசப்பாத் பள்ளத்தாக்கில் சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து மக்களினங்கள் அனைத்தையும் தீர்ப்பிட நாம் அங்கே அமர்ந்திருப்போம்.
13 அரிவாளை எடுத்து அறுங்கள், விளைச்சல் முற்றிவிட்டது; வந்து மிதியுங்கள், இரசம் பிழியும் ஆலை நிறைந்துள்ளது; திராட்சை இரசத் தொட்டிகள் பொங்கிவழிகின்றன, அவர்கள் செய்த தீமை மிகுந்து போயிற்று.
14 மக்களினங்கள், மக்கட் கூட்டங்கள் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் நிறைந்துள்ளன; ஏனெனில் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது.
15 கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன, விண்மீன்கள் ஒளிமங்கி விடுகின்றன.
16 சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கிறார், யெருசலேமில் தமது குரலையெழுப்புகிறார், விண்ணும் மண்ணும் நடுங்குகின்றன; ஆனால் ஆண்டவர் தம் மக்களுக்குப் புகலிடம், இஸ்ராயேல் மக்களுக்குக் காவலரண்.
17 அப்போது, நமது பரிசுத்த மலையான சீயோனில் குடிகொண்டுள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்று அறிவீர்கள்; யெருசலேம் நகரம் பரிசுத்த இடமாயிருக்கும், அந்நியர் அதன் வழியாய் ஒரு போதும் செல்ல மாட்டார்கள்.
18 அந்நாளில் - மலைகள் இனிமையான இரசம் சிந்தும், குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்; யூதாவின் அருவிகளிலெல்லாம் நீரோடும், ஆண்டவரின் கோயிலிலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும், சித்தீம் என்னும் பள்ளத்தாக்கில் பாயும்.
19 எகிப்து நாடு பாழாகும், இதுமேயா பாலைநிலமாகி விடும்; ஏனெனில் யூதாவின் மக்களை அநியாயமாய்த் துன்புறுத்தின, தங்கள் நாட்டில் மாசற்ற இரத்தத்தைச் சிந்தின.
20 யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாகும், யெருசலேமிலும் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் வாழ்வர்.
21 அவர்கள் இரத்தத்திற்கு நாம் பழிவாங்குவோம், குற்றவாளிகளை நாம் தண்டியாமல் விடோம், ஆண்டவர் சீயோனில் குடிகொண்டிருப்பார்."

Joel 3:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×