Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 9 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 9 Verses

1 என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமாய் இருக்கக்கூடாதா! அப்பொழுது என் இனத்தாரில் கொலையுண்ட மக்களுக்காக அல்லும் பகலும் புலம்பி அழுவேனே!
2 வழிப்போக்கர் தங்குமிடத்தைப் போலப் பாலை நிலத்தில் எனக்கோர் இடம் இருக்கக் கூடாதா! அப்பொழுது அவர்களை விட்டகன்று அங்கே போய் விடுவேனே! ஏனெனில் அவர்கள் அனைவரும் விபசாரிகள், துரோகிகளின் கூட்டம்;
3 அவர்களுடைய நாக்கு வில்லைப் போல வளைகிறது, அதில் உண்மை கொஞ்சமும் இல்லை, பொய்யே மலிந்துள்ளது; அவர்கள் ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு முன்னேறுகிறார்கள். நம்மை அவர்கள் அறிந்தார்களல்லர்.
4 ஒவ்வொருவனும் தன் அயலான் மட்டில் எச்சரிக்கையாய் இருக்கட்டும், எவனும் தன் சகோதரனை நம்பக் கூடாது; ஏனெனில் ஒவ்வொரு சகோதரனும் மற்றவனுடைய இடத்தைத் தந்திரமாய்க் கவர்ந்து கொள்கிறான்; ஒவ்வொரு நண்பனும் புறணி பேசுகிறான்.
5 ஒவ்வொருவனும் தன் சகோதரனை ஏமாற்றுகிறான்; எவனும் உண்மை பேசுவது இல்லை; பொய் சொல்வதில் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள்; அக்கிரமம் செய்கின்றனர்; மனம் வருந்தவே மாட்டார்கள்;
6 கொடுமைக்கு மேல் கொடுமையும், வஞ்சனைக்கு மேல் வஞ்சனையும் செய்கிறார்கள்; என்னை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
7 ஆகையால், சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாம் அவர்களை உருக்கிப் புடமிட்டுச் சோதிப்போம்; நம் மக்களுக்கு நாம் என்னதான் செய்ய முடியும்?
8 அவர்களுடைய நாக்கு காயப்படுத்தும் அம்பு; அது பேசுவதெல்லாம் கபடு; வாயால் அயலானுடன் சமாதான மொழிகளைப் பேசுவர்; உள்ளத்திலோ அவனுக்குப் படுகுழி வெட்டுகிறார்கள்.
9 இவற்றுக்கெல்லாம் நாம் அவர்களைத் தண்டியாமல் விடுவோமோ? இத்தகைய மக்கள் மேல் பழிதீர்த்துக் கொள்ளாமல் இருப்போமோ?
10 "மலைகளைக் குறித்து ஒப்பாரி வைத்து அழுவோம்; பாலை நிலத்தில் இருக்கும் செழித்த இடங்களுக்காகப் புலம்புவோம்; ஏனெனில் அவையெல்லாம் பாழாக்கப்பட்டன; இனி அங்கே போகிறவன் எவனுமில்லை; ஆடுமாடுகளின் குரலொலி கேட்கவில்லை; வானத்துப் பறவைகளும், வயல்வெளி மிருகங்களும், எல்லாம் அங்கிருந்து ஓடிப்போயின.
11 யெருசலேமை நாம் மண் மேடாக்குவோம், குள்ள நரிகள் வாழும் குகையாக்கி விடுவோம்; யூதாவின் பட்டணங்களையெல்லாம் குடியிருப்பார் யாருமின்றிப் பாழாக்குவோம்."
12 இதனைக் கண்டுணரத் தக்க ஞானமுள்ளவன் யார்? இதனை அறிவிக்கும்படி யாருக்கு ஆண்டவரின் வாய் பேசியிருக்கிறது? மனிதர் கடக்க முடியாதபடி நாடு பாழாகிப் பாலையானது ஏன்? மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்:
13 நாம் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தை வெறுத்து ஒதுக்கினார்கள்; நமது வாக்கியத்தைக் கேட்டு அதற்கேற்ப நடக்கவில்லை;
14 தங்கள் தீய உள்ளத்தைப் பிடிவாதமாய்ப் பின்பற்றினார்கள். முன்னோர்கள் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தபடி பாகாலைப் பின்தொடர்ந்தார்கள்;
15 ஆகையால் இஸ்ராயலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் இம்மக்களுக்குப் புசிக்கக் கசப்பான புல்லையும், குடிக்க நஞ்சு கலந்த தண்ணீரையும் கொடுப்போம்;
16 அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் அறியாத புறவினத்தார்களுக்குள் அவர்களைச் சிதறடிப்போம்; அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டி அவர்களுக்குப் பின்னாலேயே வாளையும் அனுப்புவோம்."
17 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "ஒப்பாரி வைக்கும் பெண்களைத் தேடிப் பார்த்து கூப்பிடுங்கள்; அவர்களுள் திறமை வாய்ந்தவர்களை அழையுங்கள்;
18 அவர்கள் விரைந்து வந்து நம்மைப் பற்றிப் புலம்பட்டும்; நம் கண்கள் கண்ணீரைச் சொரியட்டும்; நம் இமைகளினின்று தண்ணீர் வெள்ளமாய் ஓடட்டும்.
19 ஏனெனில் ஏற்கெனவே சீயோனிலிருந்து புலம்பல் கேட்கிறது: ' ஐயோ, நாம் எக்கதியானோம்! எங்கள் மானமெல்லாம் போயிற்றே! நாங்கள் நாட்டை விட்டு அகன்றோம், எங்கள் வீடுகள் தகர்க்கப்பட்டன' என்கிறார்கள்."
20 பெண்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; அவரது வாய்மொழி உங்கள் காதுகளில் நன்றாய் ஏறட்டும்; உங்கள் புதல்வியர்க்கு ஒப்பாரி கற்றுக் கொடுங்கள்; ஒவ்வொருத்தியும் தன் தோழிக்குப் புலம்பல் கற்பிக்கட்டும்.
21 ஏனெனில் சாவு நம் பலகணிகள் வழியாய் ஏறி வந்தது; நம்முடைய அரண்மனைகளுக்குள் நுழைந்து விட்டது; தெருக்களில் உள்ள சிறுவர்களையும் பொது இடங்களில் உள்ள இளைஞர்களையும் வீழ்த்தி விட்டது;
22 (எரெமியாசே), பேசு: "ஆண்டவர் கூறுகிறார்: 'மனிதரின் பிணங்கள் நாடெல்லாம் குப்பை போலக் குவியும், அறுப்புக்காரர் விட்டுச் சென்று எடுப்பாரின்றிக் கிடக்கும் நெற்கதிர்கள் போலக் கிடக்கும்."
23 ஆண்டவர் கூறுகிறார்: "ஞானி தன் ஞானத்தைப் பாராட்ட வேண்டாம்; வல்லவன் தன் வலிமையில் பெருமை கொள்ள வேண்டாம்; செல்வன் தன் செல்வங்களால் செருக்கு அடைய வேண்டாம்.
24 பெருமையடைய விரும்புகிறவன் நம்மையறியும் ஞானத்திலேயே பெருமையடையட்டும்; நிலையான அன்பும் நீதியும் நியாயமும் காட்டுகிற ஆண்டவர் நாமே என்பதில் அவன் பெருமிதம் கொள்ளட்டும்; ஏனெனில், இவற்றில் நாம் இன்பம் காண்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
25 விருத்தசேதனம்: நிலையற்ற உத்தரவாதம்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டும் செய்யப் படாதவர்களாய் இருப்பவர் எல்லாரையும் தண்டிப்போம்;
26 எகிப்து, யூதேயா, இதுமேயா முதலிய நாடுகளையும், அம்மோன், மோவாபு மக்களையும், தங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்கிறவர்களும், பாலை நிலத்தில் வாழ்கிறவர்களுமான எல்லாரையும் தண்டிப்போம்; ஏனெனில் இந்த இனத்தவரெல்லாரும் உடலில் விருத்தசேதனம் செய்யப்படவில்லை; ஆனால் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் உள்ளத்திலே விருத்தசேதனம் இல்லாதவர்கள்."

Jeremiah 9:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×