1
|
கடவுள் நோவாவையும் அவருடன் பெட்டகத்தில் இருந்த எல்லாக் காட்டு மிருகங்களையும் வீட்டு மிருகங்களையும் நினைவு கூர்ந்து, காற்று வீசச் செய்யவே, வெள்ளம் குறைந்தது. |
2
|
அன்றியும், பாதாளத்தின் நீரூற்றுக்களும் வானத்தின் மதகுகளும் அடைபட்டு, வானினின்று பெய்த மழையும் நின்றது. |
3
|
சிறிது சிறிதாய் வெள்ளம் பூமியில் வற்றத் தொடங்கியது. நூற்றைம்பது நாட்களுக்குப் பின் அது வடிய ஆரம்பித்தது. |
4
|
ஏழாம் மாதத்தின், இருபத்தேழாம் நாளன்று பெட்டகம் ஆர்மேனிய நாட்டு மலையின் மீது தங்கியது. |
5
|
வெள்ளம் பத்தாம் மாதம் வரை வடிந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலைகளின் சிகரங்கள் காணப்பட்டன. |
6
|
நாற்பது நாட்களுக்குப் பின் நோவா பெட்டகத்தின் சன்னலைத் திறந்து ஒரு காக்கையை வெளியே விட்டார். |
7
|
அது புறப்பட்டுப் போய்ப் பூமியில் வெள்ளம் வற்றுமட்டும் இங்குமங்குமாய்ச் சுற்றித் திரும்பவேயில்லை. |
8
|
மறுபடியும், பூமியின் மீது வெள்ளம் வற்றி விட்டதா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு, (நோவா) ஒரு புறாவை வெளியே விட்டார். |
9
|
பூமியின் மீது எங்கும் வெள்ளம் பரந்து கிடந்தமையால், கால் வைத்து இளைப்பாறவும் இடம் காணாமல் அது திரும்பவும் அவரை நாடிப் பெட்டகத்திற்கு வந்தது. அவர் கை நீட்டி அதைப் பிடித்துப் பெட்டகத்தினுள் சேர்த்தார். |
10
|
அவர் மேலும் ஏழு நாட்கள் பொறுத்து மீண்டும் புறாவைப் பெட்டகத்திலிருந்து வெளியே விட்டார். |
11
|
அது மாலை நேரத்தில் பசும் இலைகளையுடைய ஒலிவ மரத்தின் கிளையொன்றை அலகில் கவ்விக் கொண்டு தன் அண்டையில் வந்ததனால், பூமியின் மீது வெள்ளம் அற்றுப் போயிற்றென்று நோவா தெரிந்து கொண்டார். |
12
|
மேலும் அவர் வேறு ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை விட, அது அவரிடம் திரும்பி வரவேயில்லை. |
13
|
இவ்வாறு அறுநூற்றோராம் ஆண்டின் முதல் மாதம், முதல் நாளன்று பூமியின் மீது வெள்ளம் வற்றிப் போயிற்று. அப்பொழுது நோவா பெட்டகத்தின் மேல் தட்டைப் பிரித்து (வெளியே) பார்த்துப் பூமியின் மேல் தண்ணீர் இல்லையென்று கண்டார். |
14
|
இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாள் பூமி காய்ந்திருந்தது. |
15
|
அப்போது கடவுள் நோவாவை நோக்கி: |
16
|
நீயும் உன் மனைவியும், புதல்வர்களும், புதல்வர்களின் மனைவியரும் பெட்டகத்தை விட்டு வெளியே வாருங்கள். |
17
|
உன்னோடிருக்கிற பலவகை உயிரினங்களாகிய எல்லாப் பறவைகளையும் மிருகங்களையும், பூமியின் மேல் ஊர்வன யாவையும் உன்னோடு கூட வெளியே வரவிடு. நீங்கள் பூமியில் வாழ்ந்து அதன் மேல் பலுகிப் பெருகுவீர்களாக என்றார். |
18
|
அப்படியே நோவாவும், அவர் புதல்வரும், அவர் மனைவியும், அவர் புதல்வரின் மனைவியரும் வெளியேறி வந்தார்கள். |
19
|
அன்றியும், மிருகங்களும், பூமியின் மேல் ஊர்வனவாகிய எல்லா உயிர்களும் இனம் இனமாகப் பெட்டகத்தை விட்டு வெளியே வந்தன. |
20
|
பின் நோவா ஒரு பீடத்தைக் கட்டி, மிருகங்களிலும் சுத்தமான பறவைகளிலும் பலவற்றை எடுத்து அதன் மேல் தகனப் பலியாக ஒப்புக் கொடுத்தார். |
21
|
ஆண்டவர் அவற்றை நறுமணமுள்ள பரிமளமாக ஏற்றுக்கொண்டு: நாம் இனி மனிதன் பொருட்டுப் பூமியை ஒருபோதும் சபிக்க மாட்டோம். ஏனென்றால், மனிதனுடைய இதய சிந்தனைகள் இளமை முதல் தீமையின் மீதே நாட்டம் கொண்டுள்ளன. ஆதலால், இப்பொழுது செய்தது போல் இனி நாம் உயிரினங்கள் யாவையும் மறுமுறை அழிக்க மாட்டோம். |
22
|
பூமி இருக்குமட்டும் விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர் காலமும், இரவும் பகலும் ஒழிவதில்லை என்று திருவுளம் பற்றினார். |
Genesis 8:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...