Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 7 Verses

1 பின் ஆண்டவர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பெட்டகத்தினுள் செல்லுங்கள். ஏனென்றால், இப்பொழுது இருக்கிற மனிதர்களுக்குள்ளே உன்னையே நமது முன்னிலையில் நீதிமானென்று கண்டோம்.
2 சுத்தமான எல்லா மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடியும், அசுத்தமான மிருகங்களிலோ ஆணும் பெண்ணுமாக இரண்டு சோடியும்,
3 வானத்துப் பறவைகளிலும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடியும் உன்னோடு சேர்த்துக்கொள். அதனால் பூமியெங்கும் உள்ளவற்றின் வித்து காக்கப்படும்.
4 ஏனென்றால், இன்னும் ஏழு நாட்களுக்குப் பின் நாற்பது பகலும் நாற்பது இரவுமாகப் பூமியின் மேல் நாம் மழை பொழியச் செய்து, படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாவற்றையும் பூமியின் கண் அழித்து விடுவோம் என்றார்.
5 ஆகையால், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டபடி நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
6 வெள்ளம் பூமியின் மேல் பெருக்கெடுத்தோடிய காலத்தில் அவருக்கு வயது அறுநூறு.
7 நோவாவும், அவர் புதல்வர்களும், அவர் மனைவியும், அவர் புதல்வர்களின் மனைவியரும் வெள்ளப் பெருக்குக்குத் தப்புமாறு பெட்டகத்தினுள் புகுந்தார்கள்.
8 அன்றியும், கடவுள் நோவாவுக்குக் கட்டளையிட்ட வண்ணம், சுத்தமும் அசுத்தமுமான பிராணிகளிலும் பறவைகளிலும் பூமியில் ஊர்வன யாவற்றிலும்,
9 ஆணும் பெண்ணும் சோடி சோடியாக நோவாவோடு பெட்டகத்துள் நுழைந்தன.
10 ஏழு நாட்களுக்குப் பின்னர் வெள்ளம் பூமியின் மீது பெருக்கெடுத்தோடியது.
11 நோவாவுக்கு அறுநூறு வயது நடக்கும் பொழுது, அவ்வாண்டின் இரண்டாம் மாதம் பதினேழாம் நாளன்று பெரும் பாதாளத்தின் ஊற்றுக் கண்கள் அனைத்தும் உடைபட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன.
12 பூமியின் மீது நாற்பது பகலும் நாற்பது இரவும் (விடா) மழை பெய்தது.
13 (முன் குறிப்பிட்ட) அந்த (ஏழாம்) நாளிலே நோவா தம் புதல்வராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களோடும், தம் மனைவியோடும், தம் புதல்வர்களின் மூன்று மனைவியரோடும் பெட்டகத்துள் சென்றார்.
14 அவர்களோடு, பல்வேறுபட்ட காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், பூமியில் ஊர்வன, பறப்பன, பறவைகள் யாவும்,
15 உயிரினங்கள் எல்லாமே சோடி சோடியாய் நோவாவோடு கூடப் பெட்டகத்துள் புகுந்தன.
16 கடவுள் அவருக்குக் கட்டளையிட்ட வண்ணமே ஆணும் பெண்ணுமாக எல்லா உயிரினங்களும் உள்ளே புகுந்தன. பின் ஆண்டவர் வெளிப்புறமிருந்து அவனுக்குப் பின்னாலே கதவை அடைத்தார்.
17 பின் நாற்பது நாளும் பூமியின் மீது பெரு வெள்ளம் உண்டாகித் தண்ணீர் பெருக்கெடுக்கவே பெட்டகம் உயர மிதந்து செல்லலாயிற்று.
18 நீர்த்திரள் மிகுந்த வெள்ளமாகிப் பூமியின் மேலுள்ள எல்லாவற்றையும் மூடினது. பெட்டகம் நீரின் மீது மிதந்து கொண்டிருந்தது.
19 இன்னும் வெள்ளம் பூமியின் மீது மிஞ்சி அதிகரித்தமையால் வானத்துக்குக் கீழ் அதிக உயரமாய் இருந்த மலைகள் யாவுமே மூடப்பட்டன.
20 மூடப்பட்ட பெரிய மலைகளுக்கு மேல் பதினைந்து முழ உயரத்திற்குத் தண்ணீர் உயர்ந்து போயிற்று.
21 பூமியின் மீது நடமாடின உயிரினங்களான எல்லாப் பறவைகளும், வீட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின் மேல் ஊர்வன யாவும், எல்லா மனிதர்களும் அழிந்து போயினர்.
22 பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்கள் எல்லாம் மாண்டன.
23 அவ்வாறு கடவுள் மனிதன் முதல் உயிர்ப் பிராணிகள் வரை, ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரை பூமியில் வாழ்ந்து வந்த உயிர்கள் அனைத்தையும் அழித்து விட்டார். அவையெல்லாம் பூமியிலிருந்து மறைந்து போயின. நோவாவும் அவருடன் பெட்டகத்திலிருந்தவர்களுமே அப்போது தப்பிப் பிழைத்தார்கள்.
24 நீர்த்திரள் நூற்றைம்பது நாட்களாகப் பூமியை மூடிக்கொண்டிருந்தது.
×

Alert

×