1
|
கலாத்திய நாட்டில் உள்ள சபைகளுக்கு, மனிதர்களாலோ, மனிதன் வழியாகவோ ஏற்படுத்தப்படாமல், இயேசு கிறிஸ்துவினாலும், அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்த பரம தந்தையாகிய கடவுளாலும் அப்போஸ்தலனாய் ஏற்படுத்தப்பட்ட சின்னப்பனாகிய யானும், |
2
|
என்னுடனிருக்கும் எல்லாச் சகோதரரும், எழுதுவது: |
3
|
நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக! |
4
|
இவரே நம் கடவுளும் தந்தையுமானவரின் திருவுளத்திற்கேற்ப, பொல்லாத இன்றைய உலகினின்று நம்மை விடுவிக்கும்படி, நம் பாவங்களுக்காகத் தம்மையே கையளித்தவர்; |
5
|
அப்பரம தந்தைக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக! ஆமென். |
6
|
கிறிஸ்துவின் அருளால் உங்களை அழைத்தவரை விட்டு விட்டு, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறொரு நற்செய்தியைப் பின்பற்றப் போய்விட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. |
7
|
வேறொரு நற்செய்தி இருக்கிறது என்பதன்று; உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்திகளைத் திரிக்க விரும்பும் சிலர் உள்ளதுதான் தொல்லை. |
8
|
ஆனால், நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்றும் வேறான ஒன்றை, நாங்களோ, விண்ணிலிருந்து வந்த ஒரு தூதரோ, யார் வந்து அறிவித்தாலும், அவன் சபிக்கப்படுக! |
9
|
ஏற்கனவே சொல்லியிருக்கிறோம், இப்பொழுது திரும்பவும் சொல்லுகிறேன்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தினின்று வேறானதொன்றை எவனாவது உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்படுக! |
10
|
இப்படி நான் சொல்லும்போது, நான் தேடுவது மனிதருடைய நல்லெண்ணமா, கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால், நான் கிறிஸ்துவின் ஊழியனாய் இருக்கவே முடியாது. |
11
|
சகோதரர்களே, உங்களுக்கு ஒன்று தெளிவபுடுத்த விரும்புகிறேன். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதனின் படைப்பன்று. |
12
|
மனிதனிடமிருந்து நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை,. எந்த மனிதனும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாட்டின் வழியானவே அந்நற்செய்தி எனக்குக் கிடைத்தது. |
13
|
ஒரு காலத்தில் நான் யூத மறையைப் பின்பற்றியபொழுது, என்ன செய்து வந்தேன் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கடவுளின் திருச்சபையை எவ்வளவோ துன்புறுத்தி, ஒழிக்க முயன்றேன். |
14
|
முன்னோர் பரம்பரையில் ஆர்வம் மிக்கவனாய், என் இனத்தவருள் என் வயதினர் பலரினும் மேலாக யூத மறை ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினேன். |
15
|
ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தேர்ந்தெடுத்துத் தமது அருளால் என்னை அழைத்த இறைவன், |
16
|
தம் மகனைப் பற்றிய நற்செய்தியை நான் புறவினத்தார்க்கு அறிவிக்கும்படி, அம்மகனை எனக்குள் வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதனிடமும் போய்க் கலந்து ஆலோசிக்காமல், |
17
|
எனக்கு முன் அப்போஸ்தலர் ஆனவர்களையும் காண யெருசலேமுக்குப் போகாமல் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். 'அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். |
18
|
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் கேபாவைப் பார்த்துப் பேச யெருசலேமுக்குப் போனேன்; அங்கே பதினைந்து நாள் அவருடன் தங்கியிருந்தேன். |
19
|
மற்ற அப்போஸ்தலருள் ஆண்டவரின் சகோதரரான யாகப்பரைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை. |
20
|
நான் எழுதுகிற இதில் பொய்யொன்றுமில்லை. 'கடவுளே சாட்சி. |
21
|
பின்பு சீரியா, சிலியா நாட்டுப் பகுதிகளுக்குப் போனேன். |
22
|
ஆயினும் யூதேயா நாட்டுக் கிறிஸ்தவ சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலே இருந்தேன். |
23
|
ஒரு காலத்தில் நம்மைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தைப் போதித்து இப்பொழுது நற்செய்தி அறிவிக்கிறான் என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். |
24
|
அதற்காக என்னை முன்னிட்டுக் கடவுளை மகிமைப்படுத்தினர். |
Galatians 1:11 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...