Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Timothy Chapters

1 Timothy 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Timothy Chapters

1 Timothy 1 Verses

1 விசுவாச வாழ்வில் என் உண்மை மகனாகிய தீமோத்தேயுவுக்கு, நம் மீட்பராகிய கடவுளிடமிருந்தும், நம் நம்பிக்கையாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் பெற்ற கட்டளைபோல், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான சின்னப்பன் யான் எழுதுவது:
2 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உமக்கு அருளும் இரக்கமும் சமாதனமும் உண்டாகுக!
3 மக்கெதேனியாவுக்கு நான் புறப்படும் பொழுது, எபேசுவிலேயே தங்குமாறு உம்மைக் கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் தவறான கொள்கைகளைப் போதித்திருக்கிறார்கள்.
4 இவர்கள், முடிவே இல்லாத புராணக் கதைகளிலும், தலைமுறை வரலாறுகளிலும் கவனம் செலுத்துகிறார்கள். இவையோ, விசுவாசத்தை மையமாகக் கொண்ட இறைத்திட்டத்திற்குப் பயன்படாமல் வீண் ஆராயச்சிகளுக்கே இடம் தருகின்றன. இப்படிச் செய்யாதபடி நீர் அவர்களுக்குக் கட்டளையிடும்.
5 தூய உள்ளம், குற்றமற்ற மனச்சாட்சி, நேர்மையான விசுவாசம் இவற்றினின்று பிறக்கும் அன்பைத் தூண்டுவதே அக்கட்டளையின் நோக்கமாயிருக்கட்டும்.
6 இந்நெறியைவிட்டு விலகிச் சிலர் வீண் வாதங்களில் இறங்கிவிட்டனர்.
7 தாங்கள் பேசுவது இன்னதென்று தாங்களே அறியாதிருப்பினும், தாங்கள் அழுத்தமாகக் கூறுவது தங்களுக்கே புரியாதிருப்பினும், அவர்கள் சட்ட வல்லுநராயிருக்க விரும்புகின்றனர்.
8 திருச்சட்டம் நல்லதுதான், அது தெரியும், ஆனால், திருச்சட்டத்தைச் சட்டமாக மட்டுமே கொள்ளவேண்டும்.
9 அதாவது, சட்டம் நீதிமான்களுக்காக இயற்றப்படவில்லை. நெறிகெட்டவர். கட்டுக்கடங்காதவர், கடவுள் பற்றில்லாதவர், பாவிகள், கடவுளைப் புறக்கணித்தவர்கள், தெய்வ சிந்தனையற்றவர்கள், தாய் தகப்பனைக் கொலை செய்வோர், கொலைகாரர்.
10 காமுகர், இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர். ஆட்களை அடிமைகளாக்கிக் கடத்திச் செல்வோர், பொய்யர், பொய்யாணையிடுவோர், மற்றும் நலமிக்க போதனைக்கு மாறாக நடப்போர், இவர்களுக்காவே சட்டம் இயற்றப்பட்டது.
11 இப்போதனை பேரின்பக் கடவுள் என்னிடம் ஒப்படைத்துள்ள நற்செய்திக்கு, அவரது மாட்சிமைபற்றிய நற்செய்திக்கு ஒத்துள்ளது.
12 என்னை உறுதிப்படுத்திய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். ஏனெனில், என்னைத் தம் ஊழியத்திற்கு ஏற்றுத் தம் நம்பிக்கைக்குத் தகுதியுள்ளவன் எனக் கருதினார்.
13 நானோ முன்னர் கடவுளை நிந்தித்தேன். திருமறையைத் துன்புறுத்தினேன். கொடுமை புரிந்தேன், இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப் பெற்றேன். ஏனெனில், விசுவாசத்தைப் பெறாத நிலையில் அறியாமையால் அவ்வாறு நடந்தேன்.
14 கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்தோடும் அன்போடும் நம் ஆண்டவருடைய அருள் இணைந்து அளவின்றிப் பெருகலாயிற்று.
15 ' பாவிகளை மீட்கவே இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார் ' - என்னும் மொழி உண்மையானது, எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அந்தப் பாவிகளிலெல்லாம் பெரும் பாவி நானே.
16 இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப்பெற்றேன். எதற்கெனில், இயேசு கிறிஸ்து முதன் முதல் என்னிடம் நீடிய பொறுமையைக் காட்ட விரும்பினார். இவ்வாறு, அவரில் விசுவாசம் கொண்டு, முடிவில்லா வாழ்வு பெறவேண்டியவர்களுக்கு நான் மாதிரியானேன்.
17 உலகெல்லாம் ஆளும் அரசன் அழிவிலான், கண்ணுக்குப் புலப்படான், ஒரே கடவுளுக்கென்றென்றும் மகிமையும் மாட்சியும் உண்டாகுக! ஆமென்.
18 தீமோத்தேயுவே, என் மகனே, உம்மைக் குறித்து முன்னர் சொல்லப்பட்ட இறைவாக்குகளுக்கேற்ப நான் உமக்குக் கொடுக்கும் அறிவுரை இதுவே:
19 அவ்வாக்குகளின் ஆற்றலைத் துணையாகக் கொண்டு விசுவாசத்துடனும், குற்றமற்ற மனச் சாட்சியுடனும் நன்மைக்காகப் போரிடும் மனச்சாட்சியைப் புறக்கணித்ததால் தான் சிலர் விசுவாசத்தை இழந்து அழிந்தனர்.
20 அத்தகையோர்தான் இமெனேயும், அலெக்சாந்தரும். ஆகையால், அவர்கள் தண்டனை பெற்று, இனியும் கடவுளைப் பழிக்காதிருக்கப் பாடம் கற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைச் சாத்தானுக்குக் கையளித்துவிட்டேன்.

1-Timothy 1:9 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×