1
|
யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், [QBR] தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். [QBR] |
2
|
வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, [QBR] அதுவே மகாராஜாவின் நகரம். [QBR] |
3
|
அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். [QBR] |
4
|
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். [QBR] |
5
|
அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். [QBR] |
6
|
அங்கே நடுக்கங்கொண்டு, [QBR] பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள். [QBR] |
7
|
கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். [QBR] |
8
|
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; [QBR] தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா) [QBR] |
9
|
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, [QBR] உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். [QBR] |
10
|
தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல [QBR] உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; [QBR] உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது. [QBR] |
11
|
உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, [QBR] யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக. [QBR] |
12
|
சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள். [QBR] |
13
|
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, [QBR] அதின் சுவரை கவனித்து, [QBR] அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள். [QBR] |
14
|
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; [QBR] மரணம்வரை நம்மை நடத்துவார். [PE] |
Psalms 48:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...