Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 1 Verses

1 {மையக் கருத்து} [PS] தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: [QBR]
2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, [QBR] புத்திமதிகளை உணர்ந்து, [QBR]
3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். [QBR]
4 இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். [QBR]
5 புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; [QBR] விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து; [QBR]
6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், [QBR] ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான். [QBR]
7 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QBR] மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.
8 {ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள்} [PS] என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், [QBR] உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. [QBR]
9 அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், [QBR] உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். [QBR]
10 என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் [QBR] நீ சம்மதிக்காதே. [QBR]
11 எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, [QBR] குற்றமில்லாமல் இருக்கிறவர்களை [QBR] காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; [QBR]
12 பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; [QBR] குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் [QBR] அவர்களை முழுமையாக விழுங்குவோம்; [QBR]
13 விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; [QBR] கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். [QBR]
14 எங்களோடு பங்காளியாக இரு; [QBR] நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; [QBR]
15 என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், [QBR] உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. [QBR]
16 அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, [QBR] இரத்தம் சிந்த விரைகிறது. [QBR]
17 எவ்வகையான பறவையானாலும் சரி, [QBR] அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. [QBR]
18 இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், [QBR] தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள். [QBR]
19 பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; [QBR] இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.
20 {ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை} [PS] ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, [QBR] வீதிகளில் சத்தமிடுகிறது. [QBR]
21 அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், [QBR] நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, [QBR] பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது: [QBR]
22 பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, [QBR] நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, [QBR] நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். [QBR]
23 என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; [QBR] இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், [QBR] என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். [QBR]
24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; [QBR] நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. [QBR]
25 என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, [QBR] என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். [QBR]
26 ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, [QBR] நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன். [QBR]
27 நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், [QBR] ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், [QBR] நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன். [QBR]
28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; [QBR] நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; [QBR] அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். [QBR]
29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள், [QBR] யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். [QBR]
30 என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; [QBR] என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். [QBR]
31 ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; [QBR] தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள். [QBR]
32 அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், [QBR] மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்; [QBR]
33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, [QBR] அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான். [PE]

Proverbs 1:20 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×