1
|
[This verse may not be a part of this translation] |
2
|
[This verse may not be a part of this translation] |
3
|
யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய். நீ பெல வீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய். |
4
|
வீழ்பவர்களுக்கு உன் சொற்கள் உதவின. தாமாக நிற்க முடியாதவர்களுக்கு நீ பெலனளித்தாய். |
5
|
ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன, நீ துணிவிழக்கிறாய். தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன, நீ கலங்கிப்போகிறாய்! |
6
|
நீ தேவனை கனம்பண்ணுகிறாய். அவரை நம்புகிறாய். நீ நல்லவன். எனவே, அதுவே உன் நம்பிக்கையாயிருக்க வேண்டுமல்லவா? |
7
|
யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்: களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை. |
8
|
நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன். அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்! |
9
|
தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது. தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது. |
10
|
தீயோர் கர்ஜித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள். தீயோர் அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், தேவன் அவர்களின் பற்களை நொறுக்குகிறார். |
11
|
ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள். |
12
|
"இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது. என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன. |
13
|
இரவின் கெட்ட கனவாய், அது என் தூக்கத்தைக் கெடுத்தது. |
14
|
நான் பயந்து நடுங்கினேன். என் எலும்புகள் எல்லாம் நடுங்கின. |
15
|
ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது. என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன. |
16
|
ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை. என் கண்களின் முன்னே ஒரு உருவம் நின்றது, அப்போது அமைதியாயிருந்தது. அப்போது மிக அமைதியான ஒரு குரலைக் கேட்டேன்: |
17
|
‘மனிதன் தேவனைவிட நீதிமானாக இருக்க முடியுமா? தன்னை உண்டாக்கினவரைக் காட்டிலும் மனிதன் தூய்மையாக இருக்க முடியுமா? |
18
|
பாரும், தேவன் அவரது பரலோகத்தின் பணியாட்களிடம்கூட நம்பிக்கை வைப்பதில்லை. தேவன் தனது தேவதூதர்களிடமும் குற்றங்களைக் காண்கிறார். |
19
|
எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்! அவர்கள் களிமண் வீடுகளில் வசிக்கிறார்கள். இக்களிமண் வீடுகளின் அஸ்திபாரங்கள் புழுதியேயாகும். பொட்டுப்பூச்சியைக் காட்டிலும் எளிதாக அவர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள். |
20
|
ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை. அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள், |
21
|
அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன. அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள். |
Job 4:2 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...