1
|
பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த நாளை சபித்தான். |
2
|
[This verse may not be a part of this translation] |
3
|
[This verse may not be a part of this translation] |
4
|
அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன். அந் நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன். அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன். |
5
|
மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன். |
6
|
இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக் கட்டும். நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும். எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம். |
7
|
அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும். அவ்விரவில் மகிழ்ச்சியான எந்த ஒலியும் கேளாதிருக்கட்டும். |
8
|
சில மந்திரவாதிகள் லிவியாதானை எழுப்ப விரும்புகிறார்கள். அவர்கள் சாபங்கள் இடட்டும். நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும். |
9
|
அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும். அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும். சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும். |
10
|
ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை. இத்தொல்லைகளை நான் காணாதிருக்கும்படி, அந்த இரவு என்னைத் தடை செய்யவில்லை. |
11
|
நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை? நான் ஏன் பிறப்பில் மடியவில்லை? |
12
|
ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்? ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின? |
13
|
[This verse may not be a part of this translation] |
14
|
[This verse may not be a part of this translation] |
15
|
அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர், அவர்களோடு கூட புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். |
16
|
பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை? பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன். |
17
|
கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள். சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள். |
18
|
சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள். அவர்களைக் காப்போர் அவர்களை நோக்கிக் கூக்குரல் இடுவதை அவர்கள் கேட்பதில்லை, |
19
|
முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள். அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான். |
20
|
"துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்? கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் உயிர் தரவேண்டும்? |
21
|
அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை. துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான். |
22
|
அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள். |
23
|
ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார். அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார். |
24
|
சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன். மகிழ்ச்சியினால் அல்ல. என் முறையீடுகள் தண்ணீரைப் போல வெளிப்படுகின்றன. |
25
|
ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன். அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது! நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது! |
26
|
நான் அமைதியுற முடியவில்லை. என்னால் இளைப்பாற முடியவில்லை. நான் ஓய்வெடுக்க இயலவில்லை. நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!" என்றான். |
Job 3:17 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...