1
|
தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது. |
2
|
சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம். |
3
|
கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம். |
4
|
கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது. உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. |
5
|
தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்! உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும். |
6
|
தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப் பாற்ற இதைச் செய்யும். எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும். |
7
|
தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி, "நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்! என் ஜனங்களுக்கு இத் தேசத்தைப் பங்கிடுவேன். அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன். அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்" என்றார். |
8
|
கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும். எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும். யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல் |
9
|
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம். ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்." |
10
|
[This verse may not be a part of this translation] |
11
|
[This verse may not be a part of this translation] |
12
|
தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்! ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது! |
13
|
தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும். தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார். |
Psalms 108:3 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...