Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Romans Chapters

Romans 11 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Romans Chapters

Romans 11 Verses

1 அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் எனலாமா? ஒருகாலும் இல்லை. நானும் ஓர் இஸ்ராயேலன் தானே. நானும் ஆபிரகாமின் வழிவந்தவன்., பென்யமீனின் குலத்தைச் சார்ந்தவன்.
2 முன்பு தேர்ந்தெடுத்த தம் மக்களைக் கடவுள் தள்ளிவிடவில்லை. எலியாசைப் பற்றிய மறைநூல் பகுதி என்ன சொல்கிறது என்பதை அறியீர்களா ? அவர் இஸ்ராயேலுக்கு எதிராக,
3 ஆண்டவரே உம்முடைய வாக்குரைப்போரைக் கொன்று போட்டனர்; உம் பீடங்களைத் தகர்த்தெறிந்தனர்; எஞ்சியிருப்பவன் நான் ஒருவனே என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் ' என்று கடவுளிடம் மன்றாடினார்.
4 ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன? 'பொய்த் தேவன் பாகாலின் முன் முழந்தாளிட்டுப் பணியாத ஏழாயிரம்பேர் எனக்கென்று எஞ்சியிருக்கச் செய்துள்ளேன் ' என்பதாம்.
5 இக்காலத்தில் நிகழ்ந்துள்ளதும் இதுவே. இன்றும் அருளால் தேர்ந்தெடுக்கப் பட்டவராய் எஞ்சினோர் சிலர் உள்ளனர்.
6 அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராயின், செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது பொருள்; செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அருள் அருளாகாது.
7 அப்படியானால் முடிவென்ன? தாங்கள் தேடுகிறதை இஸ்ராயேல் மக்கள் இன்னும் அடையவில்லை; அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் அடைந்தனர்; மற்றவர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.
8 அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: ' மரத்துப்போன மனத்தைக் கடவுள் அவர்களுக்குத் தந்தார். காணாத கண்களையும் கேளாத செவிகளையும் தந்தார், இந்த நாள்வரை அவ்வாறே உள்ளனர். '
9 தாவீதும் இதைக் குறிப்பிடுகிறார்: ' அவர்கள் உண்ணும் விருந்தே அவர்களுக்குக் கண்ணியாகவும், வலைப்பொறியாகவும் ஆகட்டும், இடறலாகவும் தண்டனையாகவும் ஆகட்டும்.
10 காணமுடியாதபடி அவர்கள் கண்கள் இருளக்கடவன, என்றைக்கும் இறைவா அவர்கள் முதுகை வளைத்து விடும்.'
11 அப்படியானால், அவர்கள் கால் இடறியது விழுந்து ஒழிவதற்கா? இல்லவே இல்லை. அவர்கள் தவறியதால் புறவினத்தாருக்கு மீட்புக் கிடைத்தது; அவர்களுள் போட்டி மனப்பான்மையைத் தூண்டவே இங்ஙனம் ஆயிற்று.
12 அவர்கள் தவறியதால் உலகம் வளமுற்றதென்றால், அவர்கள் வீழ்ச்சியுற்றதால் புறவினத்தார் வளம்பெற்றனர் என்றால் யூதர்கள் முழுத் தொகையும் மனந்திரும்பும் போது அவ்வளம் இன்னும் எத்துணையோ மிகுதியாகும்.
13 புறவினத்தாராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் புறவினத்தாரின் அப்போஸ்தலன்தான்;
14 ஆனால் என் இனத்தாருள் போட்டி மனப்பான்மையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரை மீட்கக் கூடும் என்று நம்பியே அந்த அப்போஸ்தலத் திருப்பணியை மேலானதாக மதிக்கிறேன்.
15 யூதர்கள் தள்ளுண்டதால் உலகம் இறைவனோடு ஒப்புரவாயிற்று என்றால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது பற்றி என்னென்போம்? இறந்தோர் உயிர் பெறுவதாகும்.
16 முதலில் ஒரு பிடி மாவை இறைவனுக்கு அர்ப்பணித்துப் பரிசுத்தமாக்கினால், கலவை முழுவதும் பரிசுத்தம் ஆகிறது; அவ்வாறே வேர் பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமானவையே.
17 ஒலிவ மரத்தின் கிளைகள் சில தறிக்கப்பட்டபின், காட்டொலிவ மரக்கிளையாகிய நீ அந்த ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டு, அதன் வளமார்ந்த வேரோடு பங்கு பெற்றாய் எனின். அக்கிளைகளை விட உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ளாதே.
18 அப்படியே எண்ணிக் கொண்டாலும், நீ வேரைத் தாங்கவில்லை, வேர்தான் உன்னைத் தாங்குகிறது, என்பதை மறவாதே.
19 ' நான் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன' என நீ சொல்லக்கூடும்.
20 சரிதான்; அவர்கள் விசுவசியாததால் தறிக்கப்பட்டார்கள், நீயோ விசுவாசிப்பதால் நிலைத்து நிற்கிறாய்; அதனால் நீ உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ள இடமில்லை; அச்சந்தான் உனக்கு இருக்க வேண்டும்.
21 ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் அழிக்காமல் விடவில்லை என்றால், உன்னையும் தண்டிக்காமல் விட மாட்டார்.
22 ஆகவே கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பார். தவறி வீழ்ந்தவர்கள் மேல் ஊன்றி நிற்க வேண்டும். இல்லையேல் நீயும் தறிக்கப்படுவாய்.
23 அவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் அவிசுவாசத்தை விட்டுவிட்டால், அவர்களும் ஒட்டப்படுவர். அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.
24 ஏனெனில் காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீ வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டாயானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுவது எவ்வளவு எளிது!
25 சகோதரர்களே, உங்கள் விவேகத்தைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ளாதவாறு, மறைபொருள் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது புறவினத்தாரின் முழுத்தொகையும் வந்தடையும் வரையில் தான் இஸ்ராயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
26 இந்தத் திட்டம் நிறைவேறிய பின்னரே இஸ்ராயேல் இனம் மீட்கப்படும்; அதற்கொப்பவே மறை நூலிலும்: 'விடுதலை அளிப்பவர் சீயோனிலிருந்து வருவார், யாக்கோபின் குலத்திலிருந்து இறைப்பற்றின்மை அனைத்தையும் போக்கிவிடுவார்;
27 நான் அவர்களுடைய பாவங்களை எடுத்து விடுவேன். நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை இதுவே ' என்று எழுதியுள்ளது.
28 நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் இறைவனின் வெறுப்புக்கு உரியவர்களே; அதுவும் உங்கள் நன்மைக்கே, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுடைய முன்னோரை முன்னிட்டு, அவர்கள் இறைவனின் அன்புக்கு உரியவர்களே.
29 ஏனெனில், கடவுள் தாம் கொடுத்த வரங்களையும், விடுத்த அழைப்பையும் திருப்பி வாங்கிக் கொள்வதில்லை.
30 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினால் நீங்கள் இரக்கம் பெற்றுக்கொண்டீர்கள்.
31 அதுபோல நீங்கள் இரக்கம் பெற்றுக்கொண்டதால் அவர்கள் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; அவர்கள் இப்படிக் கீழ்ப்படியாமல் இருப்பது, அவர்கள் இரக்கம் பெற்றுக்கொள்வதற்கே.
32 ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகக் கடவுள் அனைவரும் கீழ்ப்படியாமையின் கொடுமையால் கட்டுண்டு கிடக்கச் செய்தார்.
33 கடவுளின் அருட்செல்வம் எத்துணை மிகுதியானது! அவரின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய திட்டங்கள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.
34 ' ஏனெனில், ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார்?
35 கைம்மாறாக ஏதாவது பெற்றுக்கொள்ள முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?
36 ஏனெனில், யாவும் அவரிடமிருந்தே வந்தன, அவராலேயே உண்டாயின, அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக! ஆமென்.

Romans 11:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×