Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Revelation Chapters

Revelation 8 Verses

1 ஏழாவது முத்திரையை உடைத்தபோது, விண்ணகத்தில் அரை மணியளவு மௌனம் நிலவியது.
2 பின்பு கடவுள் முன் நிற்கும் ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்கள் கையில் ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3 வேறொரு வானதூதர் பொன் தூபக்கால் ஒன்றை ஏந்திக்கொண்டு பீடத்தின்முன் வந்து நின்றார். அரியணை முன் நிற்கும் பொற்பீடத்தின்மேல், இறைமக்கள் அனைவருடைய செபக் காணிக்கைக்குத் தூபமிடுமாறு, அவருக்கு ஏராளமான சாம்பிராணி அளிக்கப்பட்டது.
4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்கள் செபங்களோடு சேர்ந்து வானதூதர் கையினின்று கடவுள் முன்பாக எழுந்தது.
5 பின்பு வானதூதர் தூபக்காலை எடுத்து, பீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகில் கொட்டினார். கொட்டவே, இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.
6 அப்போது ஏழு எக்காளங்களை ஏந்தியிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை ஊதத் தயாராயினர்.
7 முதல் வானதூதர் ஊதினார். இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி, மண்மீது பெய்தது. மண்ணில் மூன்றிலொரு பாகம் எரிந்துபோயிற்று; மரங்களில் மூன்றிலொரு பாகம் தீய்ந்துபோயிற்று; பசும் புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
8 இரண்டாவது வானதூதர் எக்காளம் ஊதினார். திப்பற்றி எரிந்த பெரிய மலைபோன்றதொன்று கடலில் ஏறியப்பட்டது. அப்போது கடலில் மூன்றிலொரு பாகம் இரத்த மயமாயிற்று.
9 கடலில் வாழும் உயிர்களுள் மூன்றிலொரு பாகம் மடிந்தது. கப்பல்களில் மூன்றிலொரு பாகம் அழிந்தது.
10 மூன்றாவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். பெரியதொரு விண்மீன் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே வானினின்று பாய்ந்து, ஆறுகளில் மூன்றிலொரு பாகத்திலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.
11 அந்த விண்மீனின் பெயர் 'எட்டி' என்பது. ஆகவே தண்ணீரில் மூன்றிலொரு பாகம் எட்டிபோல் கசப்பாயிற்று. கைப்புற்ற அந்நீரால் மனிதர் பலர் இறந்தனர்.
12 நான்காவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். கதிரோனில் மூன்றிலொரு பாகமும், நிலாவில் மூன்றிலொரு பாகமும், விண்மீன்களுள் மூன்றிலொரு பாகமும் தாக்குண்டன. அதனால் அவற்றில் மூன்றிலொரு பாகம் இருளடைந்தது. பகலொளி மூன்றிலொரு பாகம் குறைந்தது; இரவுக்கும் அப்படியே ஆயிற்று.
13 பின்பு நான் கண்ட காட்சியில், வானத்தில் உயரப் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு உரத்த குரலில், "இன்னும் மூன்று வானதூதர்கள் எக்காளம் ஊதப்போகிறார்கள். அதனால், மண்ணுலகில் வாழ்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ கேடு" என்று கத்தியது.
×

Alert

×