Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 35 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 35 Verses

1 மீண்டும் மோவாப் சமவெளிகளில் எரிக்கோவுக்கு எதிர்ப்புறத்தில் யோர்தானின் இக்கரையிலே ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளினதாவது:
2 நீ இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட வேண்டியது என்னவென்றால்: அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் லேவியருக்கு இடம் தரவேண்டும்.
3 குடியிருக்கத்தக்க நகரங்களையும், அவற்றின் சுற்றிலுமுள்ள வெளிகளையும் அவர்களுக்குக் கொடுக்கக்கடவார்கள். மேற்படி நகரங்களில் லேவியர் வாழ்ந்திருந்து, அந்த நகரங்களை அடுத்த சுற்றுவெளிகளில் தங்கள் ஆடுமாடு முதலியவற்றை வைத்துக் கொள்வார்கள்.
4 இந்தச் சுற்றுவெளிகள் மதில்களுக்கு வெளியே இருக்கும். மதில் தொடங்கி வெளியே சுற்றிலும் ஆயிரம் கெஜ தூரத்துக்கு எட்ட வேண்டும்.
5 நகரங்கள் நடுவில் இருக்க, நகரங்களைச் சேர்ந்த வெளிகள் அவற்றைச் சுற்றி இருக்கும். இவைகளுக்கும் அவைகளுக்கும் கீழ்ப்புறத்தில் இரண்டாயிரம் முழமும், தென்புறத்தில் இரண்டாயிரம் முழமும், மேற்புறத்தில் இரண்டாயிரம் முழமும், வடபுறத்தில் இரண்டாயிரம் முழமும் (இடைவெளி இருக்கும்படி அளந்துவிடுவீர்கள்).
6 நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் நகரங்களில், கொலைசெய்தவன் ஓடி ஒழியத்தக்க ஆறு நகரங்களை அடைக்கல நகரங்கள் என்று குறிக்கக்கடவீர்கள். இந்த ஆறும் தவிர வேறு நாற்பத்திரண்டு நகரங்கள் லேவியருக்கு உரியவைகளாய் இருக்கவேண்டும்.
7 எல்லாம் சேர்ந்து லேவியருக்குக் கொடுக்க வேண்டியவை நாற்பத்தெட்டு நகரங்களும் அவைகளுக்கடுத்த வெளிகளுமேயாம்.
8 நீங்கள் இஸ்ராயேல் மக்களுடைய உரிமையிலிருந்து அந்த நகரங்களைக் குறிக்கும்போது, அதிகமுள்ளவர்களிடமிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடமிருந்து கொஞ்சமும் பிரித்தெடுக்க வேண்டும். அவரவருடைய உரிமையின் தரப்படியே அவரவர் லேவியருக்குக் கொடுக்கக் கடவார்கள் என்று திருவுளம்பற்றினார்.
9 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
10 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாடு சேர்ந்த பின்பு,
11 இந்நகரங்களில் தன்னறிவின்றிக் கொலை செய்தவன் ஓடி ஒழியத்தக்க அடைக்கல நகரங்கள் எவையென்று நீங்கள் தீர்மானித்துக் குறிக்கக் கடவீர்கள்.
12 கொலை செய்து அவைகளில் அடைக்கலம் புகுந்தவன் சபையிலே நியாயம் விசாரிக்கப்படுவதற்குமுன் கொலை செய்யப்பட்டவனுடைய உறவினர் கையாலே அவன் சாகாமல் தப்பித்துக்கொள்வான்.
13 ஆதலால், அடைக்கலம் என்று குறிக்கப்படும் நகரங்களில்,
14 யோர்தானுக்கு இப்பால் மூன்றும் கானான் இருக்க வேண்டும்
15 தன்னறிவின்றி கொலை செய்தவன் இஸ்ராயேல் மகனானாலும், உங்கள் நடுவே இருக்கும் அகதியானாலும், அந்நியனானாலும் அங்கே அடைக்கலம் புகலாம்.
16 ஒருவன் இருப்பாயுதத்தால் மற்றொருவனை அடித்திருக்க அடியுண்டவன் இறந்தால், அடித்தவன் கொலைபாதகன் என்று கொலை செய்யப்படவேண்டும்.
17 ஒருவன் மற்றொருவன் மேலே கல்லெறிந்திருக்க எறிபட்டவன் இறந்தால், கல்லெறிந்தவன் அவ்விதமே கொலை செய்யப்பட்டவேண்டும்.
18 ஒருவன் மர ஆயுதத்தாலே அடிபட்டு இறந்தால், அடித்தவன் கொலை செய்யப்படுவதாலே அந்தப் பழி தீரும்.
19 கொலை செய்யப்பட்டவனுடைய உறவினர் கொலைபாதகனைக் கொல்ல வேண்டும். அவனைக் கண்டவுடனே அவர்கள் அவனைக் கொண்று விடுவார்கள்.
20 ஒருவன் பகையால் மற்றொருவனை விழத் தள்ளினான்; அல்லது பதுங்கியிருந்து அவன் மேல் ஏதேனும் எறிந்தான்; அல்லது அவனை விரோதித்துக் கையால் அடித்தான்:
21 அவ்வாறு செய்யப்பட்டவன் இறந்தானாயின் அதைச் செய்தவன் கொலை பாதகனாகையால் கொலை செய்யப்படுவான். இறந்தவனுடைய உறவினர் அவனைக் கண்டவுடனே கொன்றுவிடுவார்கள்.
22 ஆனால், அவன் எதிர்பாராத விதமாய்ப் பகையொன்றுமில்லாமலும்,
23 கடுப்பில்லாமலும் அவ்விதச் செயலைச் செய்திருப்பானாயின்,
24 அப்பொழுது, கொலை செய்தவனும் பழி வாங்க வேண்டிய உறவினனும் சபையார் முன்பாக நியாயம் பேசி, (அது எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்ததேயன்றி வேறொன்றினால் அல்லவென்று) தெளிவானால்,
25 குற்றமற்றவனென்று அவனைப் பழிவாங்குபவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் அடைக்கலம் புகத்தக்க நகரத்திற்கு நீதித் தீர்ப்பின்படி கொண்டு வரப்படுவான். பிறகு அவன், புனித தைலத்தைப் பூசி அபிஷுகம் செய்யப்பட்ட தலைமைக் குருவின் மரணம் வரையிலும் அவ்விடத்திலேயே இருக்கக்கடவான்.
26 ஆனால், கொலை செய்தவன் தான் ஓடிப்போய்த் தங்கிய அடைக்கல நகரத்தின் எல்லைகளை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
27 அவனைக் கண்டுபிடித்துக் கொன்று பழிவாங்குவோனுக்குக் குற்றம் இல்லை.
28 ஏனென்றால், ஓடிப்போனவன் தலைமைக் குருவின் மரணம் வரையிலும் அடைக்கல நகரத்தில் இருந்திருக்கவேண்டும். தலைமைக்குரு இறந்த பின்னரோ, கொலை செய்தவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகத் தடையில்லை.
29 இவை உங்கள் உறைவிடங்களெங்கும் நித்திய சட்டமாய் வழங்கி வரக்கடவன.
30 கொலை செய்தவன் சாட்சிகளுடைய வாக்கு மூலத்தின்படியே தண்டிக்கப்படுவான். மேலும், ஒரே சாட்சியைக் கொண்டு ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச் செய்யலாகாது.
31 இரத்தம் சிந்திய மனிதன் தன் உயிருக்காக பணத்தைக் கொடுத்தாலும் நீங்கள் வாங்கலாகாது. அவன் செத்தே தீர வேண்டும்.
32 அடைக்கலம் புகுந்தவர்கள் அடைக்கல நகரத்திலிருந்து குருவின் மரணத்திற்கு முன் தங்கள் ஊருக்குக் கண்டிப்பாய்த் திரும்பிப் போகலாகாது.
33 நீங்கள் குடியேறின நாடு குற்றமில்லாதவருடைய இரத்தத்தினால் தீட்டுள்ளதாகி விட்டதே! அந்த தீட்டு இரத்தம் சிந்திய பாதகனுடைய இரத்தத்தாலன்றி மற்ற எதனாலும் கழுவப்படாதென்று (நீங்கள் மறவாதபடிக்கு அதைச் சொன்னோம்).
34 அவ்வாறு உங்கள் நாடு தூய்மை பெறும். நாமும் அப்பொழுது உங்களோடு வாழ்ந்திருப்போம். ஏனென்றால், ஆண்டவராகிய நாம் இஸ்ராயேல் மக்கள் நடுவே வாழ்ந்திருக்கிறோம் என்று திருவுளம்பற்றினார்.

Numbers 35:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×