1
|
மீண்டும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கிச் சொன்னதாவது: |
2
|
இஸ்ராயேல் மக்கள் அவரவருடைய அணி வகுப்பு, விருது, கொடி, இனத்தாருடைய வீடு (முதலிய) ஒழுங்குப்படி தங்கள் தங்கள் கூடாரங்களை அடித்து சாட்சியக் கூடாரத்துக்குச் சுற்றிலும் பாளைய மிறங்குவார்கள். |
3
|
(எப்படியென்றால்) யூதா தன் படையின் அணிவகுப்புக் கீழ்ப்புறத்திலே கூடாரம் அடிக்கக் கடவான். அமினதாபுடைய புதல்வன் நகஸோன் யூதா கோத்திரத்தாருக்குத் தலைவனாய் இருப்பான். |
4
|
அவனுடைய கோத்திரத்திலுள்ள வீரர்களின் மொத்த எண்ணிக்கை, எழுபத்து நாலாயிரத்து அறுநூறு. |
5
|
இவனருகில் சூவார் புதல்வனான நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருக்கும் இசாக்கார் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். |
6
|
இவனுடைய வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஐம்பத்து நாலாயிரத்து நானூறு. |
7
|
சாபுலோன் கோத்திரத்தின் தலைவன் எலோன் புதல்வன் எலியாப். |
8
|
இக்கோத்திரத்தைச் சேர்ந்த படைவீரர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர். |
9
|
யூதாவின் பாளையத்தில் எண்ணப்பட்டவர்கள் ஒரிலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு பேர். புறப்படும்போது இவர்களே தங்கள் அணிகளின் ஒழுங்குப்படி முதலில் போகக்கடவார்கள். |
10
|
ரூபன் கோத்திரத்தார் தென்புறத்திலே பாளையமிறங்குவார்கள். செதெயூர் புதல்வனாகிய எலிசூர் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான். |
11
|
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர். |
12
|
இவனருகில் சுரிஸதையின் புதல்வன் சலமியேலைத் தலைவனாய்க் கொண்டிருக்கும் சிமையோனின் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். |
13
|
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு பேர். |
14
|
காத் என்பவனின் கோத்திரத்தின் தலைவன், துயேலினுடைய புதல்வன் எலியஸாப். |
15
|
அவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர். |
16
|
ரூபனின் பளையத்தில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஒரிலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது பேர். பயணத்தின் போது இவர்களே தங்கள் தங்கள் அணிவகுப்பின் ஒழுங்குப்படி இரண்டாவதாய்ச் செல்லக்கடவார்கள். |
17
|
பின்பு சாட்சியக் கூடாரம் லேவியராலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் எடுத்துச் செல்லப்படும். அது எப்படிக் கட்டி நிறுவப்பட்டதோ அப்படியே பிரிக்கப்படும். அவர்கள் தத்தம் இடத்தில் வரிசைப்படி நடந்து செல்லக்கடவார்கள். |
18
|
எபிராயீம் புதல்வருடைய பாளையம் மேற்புறத்தில் இருக்கும். அமியூதின் புதல்வன் எலிஸமா அவர்களுக்குத் தலைவன். |
19
|
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறு பேர். |
20
|
அவனருகே பதசூரின் புதல்வனாகிய கமலியேலைத் தலைவனாகக் கொண்ட மனாசேயின் புதல்வராகிய கோத்திரத்தார் (பாளையம் இறங்குவார்கள்). |
21
|
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்திரண்டாயிரத்து இருநூறு பேர். |
22
|
பெஞ்சமின் கோத்திரத்திற்குச் செதேயோனின் புதல்வனாகிய அபிதான் தலைவன். |
23
|
இவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்தையாயிரத்து நானூறு பேர். |
24
|
எபிராயீம் பாளையத்திலே தங்கள் அணிவகுப்புப்படி எண்ணப்பட்ட வீரர்கள் ஒரிலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர். இவர்கள் மூன்றாவதாய்ச் செல்வார்கள். |
25
|
தானின் புதல்வர்கள் வடக்கே பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு அமிசதாயின் புதல்வனான ஐயேசர் தலைவன். |
26
|
இவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் தொகை அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு. |
27
|
அவனருகே ஆசேருடைய கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு ஒக்கிரான் புதல்வன் பெகியேல் தலைவன். |
28
|
இவனுடைய சேனையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர். |
29
|
நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வனான ஐரா தலைவன். |
30
|
இவனுடைய படையில் உட்பட்ட வீரர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். |
31
|
தானின் பாளையத்திலே எண்ணப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரிலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் கடைசியாய்ச் செல்வார்கள் என்றார். |
32
|
தங்கள் தங்கள் இனத்தாரின் வீடுகளின் படியும், படைப்பிரிவுகளின் அணிவகுப்பின் படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது. |
33
|
லேவியரோ ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ராயேல் மக்களுக்குள் எண்ணப்படவில்லை. |
34
|
ஆண்டவர் கட்டளையிட்டபடி இஸ்ராயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்து வந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் அணிவகுப்பின்படி பாளையம் இறங்கி, தங்கள் வம்ச, குடும்பங்களின் ஒழுங்குப்படி புறப்பட்டனர். |
Numbers 2:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...