1
|
மீண்டும் இஸ்ராயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட மறு ஆண்டில் இரண்டாம் மாதம் முதல் நாள், ஆண்டவர் சீனாய்ப் பாலைவனத்தில் இருந்த உடன்படிக்கைக் கூடாரத்திலே மோயீசனை நோக்கி: |
2
|
நீங்கள் இஸ்ராயேல் மக்களுடைய முழுச்சபையையும் அவரவர் வீடு, வம்சம்படி எண்ணுவீர்களாக. ஆடவர் எல்லாரையும் பெயர் குறித்து எழுதுவீர்களாக. |
3
|
நீயும் ஆரோனும் இஸ்ராயேலரிலே இருபது வயது முதற்கொண்டு வலிமை மிக்கவர் எல்லாரையும் அணி அணியாய் எண்ணுவீர்களாக. |
4
|
ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், தங்கள் வம்சத்திலும் குடும்பத்திலும் தலைவர்களாய் இருப்பவர்கள் உங்களோடு இருப்பார்களாக. |
5
|
இவர்களுடைய பெயர்களாவன: ரூபனின் கோத்திரத்திலே செதெயூருடைய புதல்வனான எலிசூர், |
6
|
சிமையோனின் கோத்திரத்தில் சுரிஸதையுடைய புதல்வனான சலமியேல்; |
7
|
யூதாவின் கோத்திரத்தில்அமினதாபுடைய புதல்வனான நகஸோன்; |
8
|
இசாக்காரின் கோத்திரத்தில் சுயாருடைய புதல்வனான நத்தானியேல்; |
9
|
சாபுலோன் கோத்திரத்தில் ஏலோனுடைய புதல்வனான எலியாப். |
10
|
சூசையின் புதல்வருக்குள் எபிராயீம் கோத்திரத்தில் அமியூனின் புதல்வனான எலிஸமா; மனாசே கோத்திரத்தில் பதசூருடைய புதல்வனான கமலீயேல். |
11
|
பெஞ்சமின் கோத்திரத்தில் செதேயோனின் புதல்வனான அபிதான்; |
12
|
தான் கோத்திரத்தில் அமிசதாயின் புதல்வனான ஐயேசர். |
13
|
ஆசேர் கோத்திரத்தில் ஒக்கிரானுடைய புதல்வனான பெகியேல்; |
14
|
காத் கோத்திரத்தில் துயேலுடைய புதல்வனான எலியஸாப்; |
15
|
நெப்தலி கோத்திரத்தில் ஏனானுடைய புதல்வனான ஐரா. |
16
|
இவர்களே தம்தம் கோத்திரங்களிலும் வம்சங்களிலும் மிகப் புகழ் பெற்ற சபைப் பிரபுக்களும், இஸ்ராயேலரில் படைத் தலைவர்களுமாய் இருப்பார்கள் என்றருளினார். |
17
|
அப்படியே மோயீசனும் ஆரோனும் மேற்கூறப்பட்ட பிரபுக்களையும் இஸ்ராயேலின் முழுச் சபையையும் வரச்சொல்லி, |
18
|
இரண்டாம் மாதம் முதல் நாள் (பொதுக்) கூட்டங் கூட்டி, ஆடவரெல்லாரையும் அவரவருடைய வம்சம் வீடு, குடும்பம், ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி எழுதி, இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களையும் எண்ணிப் பார்த்தனர். |
19
|
அப்படிச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்தார். அவர்கள் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணப்பட்டனர். |
20
|
இஸ்ராயேலுடைய மூத்த புதல்வனான ரூபனின் கோத்திரத்தில், அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை, |
21
|
நாற்பத்தாறயிரத்து ஐந்நூறு. |
22
|
சிமையோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை, |
23
|
ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு. |
24
|
காத்தின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை, |
25
|
நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது. |
26
|
யூதாவின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை, |
27
|
எழுபத்து நாலாயிரத்து அறுநூறு. |
28
|
இசாக்காரின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை, |
29
|
ஐம்பத்து நாலாயிரத்து நானூறு. |
30
|
சாபுலோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை, |
31
|
ஐம்பத்தேழாயிரத்து நானூறு. |
32
|
சூசையுடைய புதல்வருக்குள் எபிராயீமின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை, |
33
|
நாற்பதினாயிரத்து ஐந்நூறு. |
34
|
மனாசேயுடைய புதல்வரின், அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்கப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை, |
35
|
முப்பத்திரண்டாயிரத்து இருநூறு. |
36
|
பெஞ்சமினுடைய புதல்வரிலே, அவரவரருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை, |
37
|
முப்பத்தையாயிரத்து நானூறு. |
38
|
தானுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை, |
39
|
அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு. |
40
|
ஆசேருடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை, |
41
|
நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு. |
42
|
நெப்தலியுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை, |
43
|
ஐம்பத்து மூன்றாயிரத்து நானூறு |
44
|
மோயீசனலேயும், ஆரோனாலேயும், பன்னிரண்டு பிரபுக்களாலேயும் எண்ணப்பட்டவர்கள் இவர்களேயாம். ஒவ்வொருவரும் அவரவர் வம்சத்து வீட்டின் ஒழுங்குப்படி (எண்ணப்பட்டனர்.). |
45
|
ஆகையால், இருபது வயதுமுதல் தத்தம் வம்சப்படியும் குடும்பப்படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களுக்குள்ளே போருக்குப் போகத்தக்க வீரர்களின் மொத்தத் தொகை, |
46
|
ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது. |
47
|
லேவியரோ தங்கள் குடும்பக் கோத்திரத்திலே எண்ணப்படவில்லை. |
48
|
ஏனென்றால், ஆண்டவர் மோயீசனை நோக்கி: |
49
|
நீ லேவியரின் கோத்திரத்தை எண்ணவும் வேண்டாம்; அவர்களின் தொகையை இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கவும் வேண்டாம். |
50
|
அவர்களைச் சாட்சியக் கூடாரத்தையும், அதனில் பயன்படும் எல்லாத் தட்டுமுட்டுகளையும், சடங்கு முறைகளுக்கு அடுத்தவைகளையும் கவனிக்கும்படி ஏற்படுத்து. அவர்களே கூடாரத்தையும் அதன் எல்லாப் பொருட்களையும் சுமந்து போகவும், ஊழியம் புரியவும் கடவார்கள். அவர்கள் கூடாரத்தைச் சுற்றிலும் பாளையம் இறங்குவார்கள். |
51
|
புறப்பட வேண்டிய போது லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பார்கள். பாளையம் இறங்க வேண்டியிருக்குங்கால், அதை அவர்களே நிறுவி வைப்பார்கள். அந்நியன் எவனேனும் அதன் அருகே வந்தால் அவன் கொல்லப்படுவான். |
52
|
இஸ்ராயேல் மக்களோ தங்கள் தங்கள் அணிவகுப்பு, கொடி, படை ஆகியவற்றின்படி பாளையம் இறங்குவார்கள். |
53
|
லேவியரோ இஸ்ராயேல் மக்கட்சபை (கடவுளின்) கோபத்திற்கு உள்ளாகாதபடிக்குத் (திருக்) கூடாரத் தண்டையில் தங்கள் கூடாரங்களை விரித்துக் கட்டி, சாட்சியக் கூடாரத்தைக் காக்கும் அலுவலை மேற்கொள்வார்கள் என்றருளினார். |
54
|
ஆகையால், இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் செய்து வந்தார்கள். |
Numbers 1:29 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...